Featured Home (TOP)

Recent Comments

Sunday, September 27, 2015

avathani Media Network

காத்தான்குடி மீடியா போரத்தின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி மீடியா போரத்தின் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று 26.09.2015 சனிக்கிழமை இரவு 9.00 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை முழு நிலவில் காத்தான்குடி கடற்கரையிலுள்ள அஷ்ஷெய்க் மும்தாஸ் மௌலவியின் வளவில் இடம்பெற்றது.

காத்தான்குடி மீடியோ போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைரூஸ் தலைமையில் இடம்பெற்ற இப் பெருநாள் ஒன்று கூடலில் காத்தான்குடி மீடியோ போரத்தின் செயலாளர் எம்.எச்.எம்.அன்வர்,பொருளாளர் ஏ.சீ.கே.பழீலுல் றஹ்மான்,உப தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி) உட்பட நிருவாகத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட மற்றும் கணிஷ்ட ஊடகவியலாளர்கள் ,நிருவாக உறுப்பினர்கள்,பொதுச் சபை அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் , பொதுச் சபை அங்கத்தவர்கள் ஆகியோரின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் இசையற்ற பாட்டு நிகழ்ச்சி,ஒரு தலைப்பில் பேசுதல்,நகைச்சுவை அரங்கு,சங்கீதக் கதிரை,நூலினால் சிறிய பந்தை வாளியில் போடுதல்,தண்ணீர் பையை பரிமாறுதல் போன்ற பல்வேறு கலாசார நிகழ்வுகளும்,விளையாட்டுக்களும் இடம்பெற்றதுடன் இதிலும் விஷேட அம்சமாக சபாநாயகர் ஒருவர் தெரிவு செயயப்பட்டு ஆளும் கட்சி,எதிர்க்கட்சி பிரிக்கப்பட்டு ஊடக பாராளுமன்றம்ஒன்றும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இதன் போது இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய நிருவாக உறுப்பினர்கள்,பொதுச் சபை அங்கத்தர்கள் ஆகியோருக்கு காத்தான்குடி மீடியா போரத்தின் சிரேஷ்ட நிருவாக உறுப்பினர்  எம்.எஸ்.எம்.நூர்தீன் , பொதுச் சபை அங்கத்தவர் மதியன்பன் மஜீத் ஆகியோரினால் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.
 
இதில் காத்தான்குடி மீடியா போரத்தின் பொதுச் சபை அங்கத்தவர் மதியன்பன் மஜீத் எழுதிய ஆனாலும் திமிருதான் அவளுக்கு என்ற கவிதை நூல் மதியன்பன் மஜீதினால் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் , பொதுச் சபை அங்கத்தவர்கள் ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி ஹஜ் பெருநாள் ஒன்று கூடலில் பங்குபற்றிய காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் , பொதுச் சபை அங்கத்தவர்கள் ஆகியோர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





































































Read More
avathani Media Network

மட்­டக்­க­ளப்பு–கொழும்பு ரயில் சேவையில் மாற்றம்

ஒக்­டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் மட்­டக்­க­ளப்­புக்கும் கொழும்­புக்கும் இடை­யி­லான புகை­யி­ரத சேவை­களில் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு பிரதி புகை­யி­ரத நிலைய அதிபர் ஏ.எல்.எம். அலிபா தெரி­வித்தார். புகை­யி­ரத திணைக்­கள துணை இயக்க அத்­தி­யட்­சரின் 585 சீ இலக்க சுற்று நிரு­பத்­துக்கு அமைய இந்த மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய மட்­டக்­க­ளப்பில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்­படும் உத­ய­தேவி புகை­யி­ரதம் காலை 6.10 க்கு புறப்­பட்டு பிற்­பகல் 3.15க்கு கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தை சென்­ற­டையும். மாலை 5.30 க்கு மட்­டக்­க­ளப்பில் இருந்து புறப்­படும் புகை­யி­ரதம் 5.20 க்கு புறப்­பட்டு மறுநாள் அதி­காலை 3.30 க்கு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தை சென்­ற­டையும்.
இரவு 8.30 க்கு மட்­டக்­க­ளப்பில் இருந்து கொழும்­புக்கு புறப்­படும் பாடும் மீன் நகர்சேர் கடு­கதி புகை­யி­ரதம் இரவு 8.15 க்கு புறப்­பட்டு மறுநாள் அதி­காலை 4.53 க்கு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தை சென்­ற­டையும். இதே­வேளை காலை 10.30 மணிக்கு மட்­டக்­க­ளப்பில் இருந்து மாகோ சந்தி வரை செல்லும் புகை­யி­ரதம் 12 ஆம் திகதி முதல் 10.15 க்கு புறப்­பட்டு மாலை 5.30 மணிக்கு மாகோ சந்­தியை சென்­ற­டையும்.
மேலும் கொழும்பில் இருந்து மாலை 7. 15 க்கு மட்­டக்­க­ளப்­புக்கு புறப்­படும் பாடும் மீன் நகர்சேர் கடு­கதி புகை­யி­ரதம் மாலை 7.00 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்­பட்டு மறுநாள் அதி­காலை 3.55 க்கு மட்­டக்­க­ளப்பை சென்­ற­டையும். கொழும்பில் இருந்து காலை 7.15 க்கு புறப்­படும் உத­ய­தேவி புகை­யி­ரதம் காலை 6.05 மணிக்கு புறப்­பட்டு பிற்­பகல் 2.45 க்கு மட்­டக்­க­ளப்பை சென்­ற­டையும். இரவு 9.45 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்­படும் புகை­யி­ரதம் 9.30 க்கு புறப்­பட்டு மறுநாள் காலை 6.55 மணிக்கு மட்­டக்­க­ளப்பைச் சென்­ற­டையும்.
இந்த நேர மாற்றம் அக்­டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் அமுல்­ப­டுத்­தப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஒரு வருடத்துக்கு முன்னர் 2014 அக்டோபர் மாதத்திலும் மட்டு. கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

நிந்தவூர் சுகாதார அதிகாரி காரியாலயத்தில் தாய் ஒருவருக்கு நடந்த அநீதி

(முஹம்மட் ஜெலீல்  நிந்தவூர்)

நேற்று 26-09-2015 அன்று தாய் ஒருவர் தனது ஒன்னரை மாத குழந்தையை  நிந்தவூர்-16ம், பிரிவு நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்திருக்கும் சுகாதார அதிகாரி காரியாலயம் (M.O.H.Offfice)க்கு போசாக்கு பரிசோதனைக்காக நிறுத்து டை பார்ப்பதற்கு எடுத்துச் சென்றபோது அங்குள்ள தாதி ஒருவர் குழந்தையை நிறுத்து இடை பார்த்துவிட்டு குழந்தையின் தாயிடம் குழந்தைக்குரிய “த்றிபோசா மாவினை பெற்றுச் செல்லுமாறு கூறியிருக்கின்றார்.

தாயும் அங்கு பல நேரமாக காத்திருந்து சற்று நேரம் கழித்துவிட்டு அங்குள்ள தாதி ஒருவரிடம் கேட்டிருக்கின்றார் தான் பல மணி நேரமாக எனது ஒன்னரை மாத குழந்தையை வைத்துக்கொண்டு  காத்துதிருக்கின்றேன் இன்னும் நீங்கள் “த்றிபோசா தரவில்லையே என்ன காரணமென்று கேட்டிருக்கின்றார் அதற்கு அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தாதி ஒருவர் கூறியிருக்கின்றார் த்றிபோசா களஞ்சிய அறையின் திறப்பு (சாவி) வேறொரு தாதியிடம் உள்ளது அவர் வரும் வரைக்கும் காத்திருக்கும்படி ஒன்னரை மாத குழந்தையின் தாயிடம் தாதி கூறியுள்ளார்.

மேலும், அந்த ஒன்னரை மாத குழந்தையின் தாய் தனது குழந்தையை கையில் ஏந்தியவாறு சுமார் இரண்டரை மணித்தியாலம் காத்திருந்த பிற்பாடு திரும்பவும் அங்குள்ள தாதி ஒருவரிடம் கேட்டுள்ளார் இன்னும் த்றிபோசா தரவில்லையே களஞ்சிய அறையின் திறப்பை  வைத்திருக்கும் தாதி இன்னும் வரவில்லையா என்று கேட்டதன் பிற்பாடு அங்குள்ள தாதி கூறியுள்ளார் அந்த களஞ்சிய அறையின் திறப்பை வைத்திருக்கும் தாதி விடுமுறையில் இருக்கின்றார் அவர் இன்றைக்கு வரமாட்டார் வேறு ஒரு நாளில் வந்து த்றிபோசாவை பெற்றுகொள்ளுமாறு தாதி கூறியிருக்கின்றார்.

பின்னர் அந்தத் தாய் தனக்கு ஏற்பட்ட நிலமையை கணவரான ஷாபி அவர்களிடம் கூறியதும் அவர் உடனே (M.O.H.Offficeக்கு வந்து தனது மனைவிக்கு ஏற்பட்ட அவலத்தை பற்றி நியாயம் கேட்டதும் அங்குள்ள தாதியர்கள் பல கோணங்களில் பதில் கூறியதாக ஷாபி அவர்கள் தெரிவித்ததோடு இதுவொரு அநியாயமான செயற்பாடு அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையான காலநேர அட்டவணை குறிப்பிடப்பட்டு பணிபுரிவதாக தெரியவில்லை அப்படி முறையாக குறிபிட்ட அட்டவணைப்படி பணிபுரிந்திருந்தால் எனது மனைவியை அவ்வளவு நேரம் காத்திருக்க வைத்து கலைவாரி விட்டிருக்கமாட்டார்கள் என கூறியதோடு இதற்குரிய சட்ட நடவடிக்கையை கணவரான ஷாபி அவர்கள் உடனே மேற்கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.

தகவல்: தாயின் கணவர் எஸ்.எ.எம்.ஷாபி
 96,புகாரி வீதி நிந்தவூர்-16.



Read More
avathani Media Network

(யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் 2வது மாபெரும் இரத்ததான முகாம் -படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் (யூஸ்)  கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “உயிர் காக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவுங்கள் ” எனும் தொனிப்பொருளில் மனித நேயம் பேணும் 2வது மாபெரும் இரத்ததான முகாம்  26-09-2015 நேற்று சனிக்கிழமை காத்தான்குடி-05 மட்-அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

(யூஸ்)  கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் தலைவர் அல்பர் தலைமையில் இடம்பெற்ற இம் மாபெரும் இரத்ததான முகாமில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி தாதியர்கள் ,ஊழியர்கள் உட்பட ஊர் பிரமுகர்கள் ,புத்திஜீவிகள் ,இளைஞர் யுவதிகள் , யூஸ் அமைப்பின் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக்கினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள் ,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

மேற்படி இரத்ததான முகாமில் ஆண்,பெண் 151 பேர் தங்களது இரத்தத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் தெரிவித்தார்.
 
குறித்த (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் காத்தான்குடி பிரதேசத்தில் சிரமதானம்,இரத்த தானம் ,கல்வி தொடர்பான இலவச வகுப்புக்கள் நடாத்துவது,நோயாளிகளை நலம் விசாரிப்பது போன்ற மனித நேயம் பேணும் சமூகப்பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





















Read More