வரவு செலவுத் திட்ட அறிவிப்புக்கு அமைய கட்டண அதிகரிப்பு செய்யப்படவிருந்த நிலையில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னரான வாரத்தில் 10,000 புதிய பாஸ்போர்ட்களை பொ துமக்கள் பெற்றுள்ளனர். நாளாந்தம் 2500 பாஸ்போர்ட்க்கள் வழங்கப்படுகின்றன.முண்டியடித்துக்கொண்டு கட்டண அதிகரிப்பிலிருந்து தப்புவதற்காக மக்கள் பாஸ்போர்ட்டுக்களைப் பெற்றதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பிரதம கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.
பட்ஜட் அறிவிப்பில் புதிய பாஸ்போர்ட் கட்டணம் பற்றி அறிவிக்கப்பட்டது. வழமையான சேவை மூலம் வழங்கப்படும் பாஸ்போர்ட் கட்டணம் 2500 ரூபாவிலிருந்து 3000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது.
ஒருநாள் சேவை மூலம் வழங்கப்படும் பாஸ்போர்ட்டுக்கு 10,000 ரூபா புதிய கட்டணமாகும். இதன் பழைய கட்டணம் 7500 ரூபா. 16 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கான சகல நாடுகளுக்குமான பாஸ்போர்ட் வழமையான சேவையில் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பழைய கட்டணம் ரூபா 1500.
