(ஜுனைட்.எம்.பஹ்த்)
கடந்த 2015ம் ஆண்டு நடந்த க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவ
மாணவிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலை கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் தமது துறையில் சிறந்த முறையில் மேட்படிப்பினை மேற்கொண்டு அதில் நிபுணத்துவம்
அடைந்து இப்பிரதேசத்திற்கும், இம்மக்களுக்கும், இந்நாட்டிகும் சிறந்த சேவைகளை மேற்கொண்டு அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்
என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தனது
வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்..
மேலும் அவர் தனது வாழ்த்து செய்தியில் இவ் உயர்தர பரீட்சையில் காத்தான்குடி
காத்தான்குடி பிரதேச பாடசாலைகளில் இருந்து சிறந்த சித்தியுடன் வைத்திய துறை,
பொறியியல் துறை, தொழிநுட்பத் துறை, முகாமைத்துவ வர்த்தக துறை மற்றும் கலைத்துறை, ஆகிய துறைகளுக்கு காத்தான்குடியில் இருந்து பல மாணவர்கள் சிறந்த
பெறுபேற்றை பெற்று பல்கலை கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர் என்பது இப்பிரதேசத்திட்கு ஓர் மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமை சேர்க்க கூடிய
விடயமாகும். இவ்வாறு சித்தியடைந்து பல்கலை கழகத்திற்கு தெரிவாகிய அனைத்து மாணவ
மாணவியர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும்
மகிழ்ச்சியடைகின்றேன்.
இதே போன்று ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்று
பல்கலை கழகத்திற்கு தெரிவான அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
அதே நேரம் பல்கலை கழகத்திற்கு தெரிவு செய்யப்படாத அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வருத்தத்தினை தெரிவிப்பதோடு அவர்கள் சோர்ந்து துவண்டு
விடாமல், முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் எனவே அவர்கள் மீண்டுமொரு முறை
முயற்சி செய்து க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றி தனது ஆற்றலினை
வெளிப்படுத்தி நல்ல பெறுபேறுகளை பெற்று பல்கலை கழகத்திற்கு செல்ல வேண்டுமென வாழ்த்துகிறேன்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவ
மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இதே போல் கிழக்கு மாகாணத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த அனைத்து
மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும்
மகிழ்ச்சியடைகின்றேன்.
மேலும் ஒட்டுமொத்தமாக நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலை
கழகத்திற்கு தெரிவான அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் நல்வாழ்த்துக்களை
தெரிவிப்பதில் மிக்க மாகிழ்ச்சி அடைகின்றேன்.
