புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் முதல் மூன்று மாதங்களுக்குள் மக்களின் கருத்துக்களை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
