குவைத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளான இலங்கை பணிப்பெண்கள் 80 பேர் இன்று நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
குறித்த பெண்கள் குவைத் தூதுவராலயத்தின் பாதுகாப்பு முகாமில் தங்கியிருந்ததாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்த காலம் நிறைவடைந்த பணிப்பெண்கள், உரிய ஊதியம் வழங்கப்படாத பெண்கள் உள்ளிட்டோர் இதில் அடங்குவதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
பணிப்பெணிகளிடம் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்திலும் குவைத்திலிருந்து 70 இலங்கை பணிப்பெண்கள் தாயகம் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
