கடந்த வருடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எச்.என்.டீ.ஏ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த எட்டு மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
கருவாத்தோட்டம் காவற்துறையினர் இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு வழங்கிய விளக்கமளிப்பின் அடிப்படையில், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர்கள் எதிர்வரும் மே மாதம் 20ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29ம்திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது காவற்துறையினர் வரம்பை மீறி செயற்பட்டதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நட்ட ஈட்டை வழங்க வேண்டும் என்றும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணையகம் அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
