( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை தமது அங்கத்தவர்களுக்கு 2016ம் ஆண்டுக்கான நாட்குறிப்பேட்டுப் புத்தகங்கள் (டயறிகள்) வழங்கும் நிகழ்வு நேற்று காரைதீவு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் தலைவர் ஜலீல் ஜீ தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரபல சமூகசேவையாளரும், காரைதீவு கோட்டக் கல்வி அதிகாரியுமான பரதன் கந்தசாமி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, நாட்குறிப்பேடுகளை வழங்கி வைத்தார்.