தெஹிவளை பேருந்து தரிப்பிடத்தில் தாயுடன் நின்று கொண்டிருந்த மூன்றரை வயது குழந்தை கார் மோதியதில் பலியாகினர்.
நேற்று பிற்பகல் ஏற்பட்ட குறித்த விபத்தில் குழந்தை ஸ்தலத்தில் பலியாகியதுடன் அவனது தாய் பலத்த காயங்களுடன் வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொஸிலார் தெரிவித்தனர்.
தாய் மற்றும் குழந்தை பேருந்து தரிப்பிடத்தில் அருகே பேருந்துக்காக காத்திருக்க வேளையில், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் பாதையை விட்டு விலகி அவர்கள் மீது மோதியதனாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
