Featured Home (TOP)

Recent Comments

Monday, January 11, 2016

avathani Media Network

தமிழ்,முஸ்லிம்களை புறக்கணித்தால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் அபாயம் : சம்பிக்க

அனைத்து தரப்­பி­னதும் ஒத்­து­ழைப்பின் பிர­கா­ரமே அர­சி­ய­லமைப்பு திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்­களை புறக்­க­ணிக்கும் வகையில் இனியும் செயற்­பட முடி­யாது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.
இன­வாத அடிப்­ப­டையில் தொடர்ந்தும் செயற்­பட்டால் மீண்டும் நாட்டில் உரி­மைக்­கான போராட்டம் ஏற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எவ்­வா­றான யோச­னை­களை ஜாதிக ஹெல உறு­மய கட்சி முன்­வைக்கும் என வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
கடந்த 30 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இந்த நாட்டில் இன­வாத அடிப்­ப­டை­யி­லேயே அர­சியல் நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதி­கார ரீதி­யிலும் பெரும்­பான்மை சிறு­பான்மை என்ற அடிப்படையி­லேயே முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் நடந்­து­கொண்­டனர். நாட்டில் யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­னரும் அவ்­வா­றான நிலைமை தொடர்ந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
எனினும் இப்­போது அவ்­வா­றான ஒரு நிலைமை இல்லை. இன்று நாட்டில் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்­றி­ணைந்து ஒரு நல்­லாட்­சியை உரு­வாக்­கி­யுள்­ளனர். அந்த நல்­லாட்­சியில் இன­வா­தமோ மத­வா­தமோ இல்­லாது வடக்குஇ தெற்கு ஒன்­றி­ணைந்து செயற்­படும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. ஆகவே அவ்­வா­றான நிலையில் இந்த ஒற்­று­மையை தக்­க­வைக்கும் வகையில் அர­சாங்கம் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவே எதிர்­பார்க்­கின்­றது.
இப்­போது கிடைத்­தி­ருக்கும் சந்­தர்ப்­பத்தை நழு­வ­வி­டக்­கூ­டாது என ஜனா­தி­ப­தியும்இ பிர­த­மரும் எதிர்­பார்க்­கின்­றனர். அதேபோல் பிர­தான இரண்டு கட்­சி­களும் அதே நிலைப்­பாட்டில் தான் உள்­ளன. தமிழ், முஸ்லிம் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­களும் அவ்­வா­றான ஒரு நிலைப்­பாட்டில் உள்­ளனர். கடந்த காலத்தில் நாட்டை பிள­வு­ப­டுத்­தும்­வ­கையில் செயற்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் இன்று ஐக்­கிய இலங்­கையில் தமிழ் முஸ்லிம் மக்­களின் தீர்வு தொடர்பில் சிந்­திக்க ஆரம்­பித்­துள்­ளன.
ஆனால் அன்று யுத்­தத்தை வெற்­றி­கொண்ட தலைவர் உள்­ளிட்ட நாட்டை நேசித்த அணி­யினர் இன்று நாட்டில் மீண்டும் ஒரு குழப்பம் வர­வேண்டும் என்ற எதிர்­பார்ப்பில் செயற்­ப­டு­கின்­றனர். மீண்டும் புலிக்­க­தை­களை கூறியும் புலம்­பெயர் பிரி­வி­னை­வாத கதை­களை கூறியும் நாட்டில் இன ரீதி­யி­லான குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றனர். ஆகவே அதற்கு இட­ம­ளிக்கக் கூடாது.
எனவே இப்­போது ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் தெரி­வித்­துள்­ள­மைக்கு அமைய நாட்டில் சகல மக்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சியல் அமைப்பு திருத்­தத்தை ஏற்­ப­டுத்­த­வேண்டும். அனைத்து கட்­சி­க­ளி­னதும் ஆத­ர­வுடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வர வேண்டும். இப்­போதும் ஒரு சில­ரது தேவையை நிறை­வேற்றும் வகையில் பக்­க­ச்சார்­பான வகையில் செயற்­பட்டால் மீண்டும் நாட்டில் உரி­மைக்­கான போராட்டம் ஒன்று உரு­வாகும்.
ஆகவே தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தரும் வகையிலும் சிங்கள மக்களின் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் ரீதியிலும் செயற்பட வேண்டும் என நாம் விரும்புகின்றோம். எவரையும் புறக்கணித்து நாட்டில் ஐக்கியத்தை உருவாக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடு என்றார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :