Featured Home (TOP)

Recent Comments

Friday, January 29, 2016

avathani Media Network

SLMC தலைமைத்துவம் கருத்திற் கொள்ளுமா...?

முஸ்லிம் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க போராட்டக் களத்தில் மிக தீவிரமாக இயங்க மறைந்த தலைவர்  மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு மக்களின் இருப்பை உறுத்திப்படுத்தி உரிமைகளை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த போது எம்மனைவரையும் விட்டு மறைந்து சென்றார்.

அந்த தருணத்தில் இக்கட்டான சூழ்நிலையில் பல சூழ்ச்சிகளையும் தகர்த்து தற்போதைய தலைவர் சகோ.ரௌப் ஹக்கீம் கட்சியை சரியாக வழிநடத்திக்கொண்டிருக்கும் போது பல குள்ளர்களின் சதிகளும் அரங்கேராமலில்லை. அவற்றையெல்லாம் தர்த்தேரிந்து கட்சியை கொண்டு சொல்லும் போது தலைமைக்கு பல சவால்கள் வராமளுமில்லை. என்பதை சகலரும் நன்றாக அறிவோம்.

ஆனால் அம்பாரை,திருமலை,மட்டு  மாவட்டங்களை  பொறுத்தவரை கட்சி சற்று ஆட்டம் காண ஆரம்பிக்கிறது என்பதை கட்சி அறியாமளுமில்லை. ஆனால் கட்சி தலைமை சாணக்கியமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரமும் இதுவே.

கட்சியின் சார்பில் தற்போது அங்கம் வகிக்கும் ஆரம்ப கால போராளிகளை கௌரப்படுத்தி ஒரு புறம் வைத்து விட்டு கட்சிக்கு புது இரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் இது. அந்த வகையில் பழைய முகங்களையே மக்கள் ஆதரித்து அவர்களின் மீது அதிருப்தி கொண்டுள்ளதை நன்றாக சிந்திக்க கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது, எதிர்வரும் காலங்களில் நடைபெறப்போகும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது கட்சியின் கடமையாகும் .இதனையே மக்களும் விரும்புகின்றனர். 

அதிருப்தி கொண்ட மக்கள் கடந்த பொதுத்தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அடங்கலாக 40 ஆயிரத்திக்கும் மேலதிகமான வாக்குகள் சிங்கள சகோதர வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்தமையும் கட்சியின் நிர்வாகத்தின் கீளே  உள்ள கல்முனை மாநகர சபைக்கு முன் வைக்கப்படும் விமர்சனங்களும்  இதற்க்கு நல்ல உதாரணமாக கொள்ளலாம் 

அதே போன்று எதிர்வரும் காலங்களில் பழைய முகங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மக்கள் விரும்புவது போல புதிய முகங்களாக களமிறக்க வேண்டும். அடுத்த பொதுத்தேர்தலின் போது கல்முனை தொகுதியில் கல்முனையின் ராஜாவாக இருந்து செயலாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களின் மகனான ரஹ்மத் மன்சூரையும்,பொத்துவில் தொகுதியில் அட்டாளைச்சேனை மக்களுக்கு நீண்ட நாட்களாக ஆசைகாட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கதிரையை வழங்குவதற்காக வினைத்திறன் மிக்க மாகாண  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சகோ.ஏ.எல்.எம்.நசீருக்கும்,சம்மாந்துறை தொகுதியில் மக்கள் நலனை கருத்திற்கொண்டு  இம்முறை தேர்தலில் களமிறங்காது விட்டுகொடுத்து கட்சிக்கு பல வகையிலும் ஒத்தாசை புரிந்து வரும் பொறியலாளர் உதுமாங்கண்டு நாபீர் அவர்களையும் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு களமிறக்க வேண்டும் என்பது மக்களினதும்,புத்திஜீவிகளினதும்  கருத்தாக உள்ளது.

இவ்வாரன  ஆலோசனைகளை கட்சியும், தலைமையும் ஏற்று நடப்பதன் மூலம் பல குள்ளநரி தந்திரம் கொண்ட வர்களிடமிருந்து எமது மக்களின் உரிமைகளையும் கட்சியின் இருப்பையும் தக்க வைத்து கொள்ளலாம்.இதனை கட்சி கரிசனை கொள்ளுமா?????

சஜா எம்  அனஸ் 

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :