பாராளுமன்றம், மற்றும் மாகாண சபை உள்ளுராட்சித் தேர்தல்களின் போதான தேர்தல் நியமன நடவடிக்கைகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் முப்பத்தைந்து வீதத்திற்கு அதிகமாக ,இருத்தல் வேண்டும் என்பதை அரசு நிபந்தனையாக்க வேண்டும் என பெண்களுக்கான வவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் மும்மொழிவுகள் முன் வைக்கப்பட்டுள்ளதாக பெண்களுக்கான வவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மாஹம்சா தெரிவித்தார்.
இந்த மும்மொழிவுகள் தேசிய சூறா சபையிடம் முன் வைத்துள்ளதாக இந்த மும்மொழிவுகள் தேசிய அரசியல் யாப்பு சபையிடமும் முன் வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்;
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது எல்லாத் தேர்தல்களிலும், மக்கள் தீர்ப்புக்களிலும், வாக்களித்தல், பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குழுக்களுக்கு ஆண்களைப் போலவே பெண்களும் தகைமையுடயவராக ,ருத்தல் வேண்டும் என்பதுடன் அதனை அமுல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் போது பெண்கள் போட்டியிட்டு குறைந்த வாக்குகளைப் பெற்றாலும் கோட்டா முறை மூலம் பெண்களுக்கு வாய்ப்பளித்து தெரிவு செய்வதற்கான முறைமையினை அரசு சட்டமாக்க வேண்டும.;
தேசியப் பட்டியலுக்காக முன்கூட்டியே கட்சிகளால் சமர்ப்பிக்கப்படும் பெயர்ப்பட்டியில் பெண்களி;ன் பெயர்கள் கட்டாயம் ,இருக்க வேண்டுமென்பதையும், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களி;ல் தேசியப்பட்டியலில் ,இருந்து மூன்றில் ,ஒரு பங்கு பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்.
சமூக ரீதியாக பெண்களி;ன் அரசியல் பிரவேசம் மிகக் குறைவாக ,ருப்பதால் பெண்களின் பங்களிப்பு சட்டம் ,யற்றும் ,டங்களிலும், தீர்மானம் எடுக்கும் உயர் குழுக்களிலும் ,ல்லாமையினால் பெண்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படாமையினால் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகிறது. இதனைக் கருதிற் கொண்டு பெண்கள் உள்வாங்கப்பட்டு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
அரசின் அனைத்து மட்டங்களிலும் பகிரங்க பதவிகளை வகித்தலிலும், எல்லாப் பகிரங்க பணிகளை புரிதலிலும் பெண்கள் ஓரங்காட்டப்படாமல் சம வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும்.
சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைச் செய்யும் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நெகிழ்வுத்தன்மையுடன் ,இருப்பதை ,இல்லாமலாக்கி அதி உச்ச தண்டனையை காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும.;
முஸ்லிம் தனியார் சட்டத்தை முழுமையாக கடைப்பிடிக்க சந்தர்ப்பம் அளிப்பதுடன் காழி நீதிபதிகளை அரசு தெரிவு செய்து அவர்களுக்கான ஊதியத்தை அரசு வழங்க வேண்டும்.
முஸ்லிம் தனியார் சட்டத்தை முழுமையாக கடைப்பிடிக்க சந்தர்ப்பம் அளிப்பதுடன் காழி நீதிபதிகளை அரசு தெரிவு செய்து அவர்களுக்கான ஊதியத்தை அரசு வழங்க வேண்டும்.
குடும்ப வன்முறைகளினால் அல்லது வல்லுறவு சம்பவத்தினால் பாதி;க்கப்படும் பெண்களுக்கான காப்பகங்கள் அரசினால் அமைக்கப்பட வேண்டும்.
மாவட்ட ரீதியாக பெண்களுக்கான தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு பெண்கள் தொடர்பான சிவில் வழக்குகளை கையாள அங்கீகாரம் அளி;க்கப்படல் வேண்டும்.
பெண்கள் தொடர்பான ஆடைகள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்தல் அரசின் கடமையாதல் வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.