சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை ஏற்பாடு செய்த பிரதான மரநடுகை நிகழ்வு
இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை ஏற்பாடு செய்திருந்தபிரதானமரநடுகை நிகழ்வு, இன்று(04) மாலை4.30 மணியளவில் கொழும்புமருதானை ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகண முதலமைச்சர் இஷுரு தேவப்பெரும கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்ந நிகழ்வில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும், ஈரான் நாட்டுக்கான முன்னாள் தூதுவருமான உமர் காமில், முதலமைச்சரின் இணைப்பாளர் அஸ்லம் குரைஷி தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள், செயற் குழு அங்கத்தவர்கள், மருதானைப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உருப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
About avathani Media Network -
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.