சிறீலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ ) காத்தான்குடி கிளை யின் ஏற்பாட்டில் வாராந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற தெருமுனைப் பிரச்சாரம் இன்று காத்தான்குடி கடற்கரை வீதியில் இடம் பெற்றது.
'அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய வழியில் வாழ்வமைப்போம்' எனும் தலைப்பில் இன்றைய உரையினை அமைப்பின் பிரச்சாரகர் நிகழ்த்தினார்.
வீதியின் ஓரங்களில் நின்றவர்கள் இந்த உரையினை மிகவும் அவதானத்துடன் கேட்டுக்கொண்டிருந்ததையும் காணக்ககூடியதாக இருந்தது.

