Featured Home (TOP)

Recent Comments

Monday, January 11, 2016

avathani Media Network

"நல்லாட்சி என்ற பதம் அரசியலுக்காக துஸ்பிரயோகம் செய்யப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது" பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

"உயர்ந்த அரத்தம் கொண்ட வார்தைகள் பல எமது அரசியல் வாதிகளினால்  தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வந்துள்ளன. அந்த வரிசையில் நல்லாட்சி என்ற வார்த்தையும் அரசியலுக்காக துஸ்பிரயோகம் செய்யப்படுவனை அனுமதிக்க முடியாது" என NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.



 நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தியதான செயற்பாடுகள் மற்றும் அதன் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாக, ஆதரவாளர்கள் மத்தியில் விளக்கமளிக்கும் நோக்குடன் NFGGயினால் மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த  சனிக்கிழமை NFGGயின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  .
அப்துர் ரஹ்மான் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது ... 
 "எமது அரசியல் வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களிலும் அரசியல் தலைமைகளினால் ஜனநாயகம், தேசப்பற்று, அமானிதம், மக்கள் நலன் போன்ற உயர்ந்த அர்த்தம் கொண்ட சொற்பதங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்துள்ளன. அந்த வரிசையில் இன்று நல்லாட்சி எனும் சொற்பதமும் துஸ்பிரயோகம் செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாமது.



  உண்மையில் இவ்வாறான சொற்பிரயோகங்களின் உள்ளார்ந்த உயர்ந்த அர்த்தங்கள் புரிந்து கொள்ளப்படாமலும் அவற்றை நடைமுறையில் செயற்படுத்தாமலுமே இது வரை காலங்களில் அரசியல்வாதிகள் அவற்றைப்பயன்படுத்தி வந்துள்ளனர். தங்களது பதவிக் கதிரைகளை பாதுகாப்பதற்காகவும் சுயநல அரசியல் இலாபங்களுக்காகவுமே அரசியல்வாதிகளினால் இவ்வாறான சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 



 இந்த வரிசையில் இன்று நல்லாட்சியைப் பற்றிப்பேசுகின்ற பலரினால் உண்மையில் நல்லாட்சியினை நடைமுறைப்படுத்த முடியவில்லை.எனவேதான் வெறுமனே நல்லாட்சியைப்பற்றி வெறும் கோஷங்களை மட்டும் எழுப்புகின்ற அரசியலை கைவிட்டு நல்லாட்சியை நடைமுறைப்படுத்தி அதன் உண்மையான நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கின்ற சூழலினை நாம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான அர்த்தபூர்வமான அரசியலினை முன்னெடுக்கவே நாம் உறுதியுடன் உழைத்து வருகின்றோம். எனவேதான், இந்நாட்டிற்கு அவசியப்படுவது வெறும் ஆட்சி மாற்றமின்றி நல்லாட்சியின் அடிப்படையிலான ஆட்சி முறை மாற்றமாகுமென நாம் ஆரம்பம் முதலே அறைகூவல் விடுத்து வருகின்றோம்.



 இன்று நாட்டில் நல்லாட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியும் கவலையும் ஆதங்கமும் கலந்த ஒரு மனோ நிலையே எமக்கிருக்கிறது. இந்த நாட்டில் நிலவி வந்த அராஜகமான ஆட்சியினை முடிவிற்கு கொண்டு வந்ததன் மூலம் அடக்குமுறைகளற்ற , ஜன்னாயக தன்மைகளை கொண்ட ஒரு ஆட்சி முறை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அதேவேளை இந்த மாற்றத்தை பயன்படுத்தி நல்லாட்சியின் அடிப்படை பண்பகளை  இன்னும் வலுப்படுத்தி இதைவிடவும் பலமடங்கு அர்த்த பூர்வமான நல்லாட்சியினை இந்நாட்டில் நிறுவியிருக்க முடியும் எனும் கவலையும் ஆதங்கமும் மனதில் இருக்கிறது. இந்த விடயங்களைப் வலியுறுத்தி அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டும் வகையிலேயே நாம் ஒரு அறிக்கையினையும் இன்று வெளியிட்டு வைத்துள்ளோம்"எனவும் அவர் குறிப்பிட்டார். 



இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் உட்பட அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்நிகழ்வில்  NFGGயின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க்  முஹம்மட் நஜா, தேசிய கொள்கை பரப்புச்செயலாளர் சிராஜ் மஷ்ஹுர் தலைமைத்துவ சபை உறப்பினர்களான Dr. SM ஸாஹிர், தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.ILM ரிபாஸ் மற்றும் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், பிராந்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்விமான்கள், உலமாக்கள், மகளிர் அணி உறுப்பினர்கள், NFGGயின் ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.


Read More
avathani Media Network

ஆற்றங்கரை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு; NFGG நடவடிக்கை.

காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதி மீனவர்களினதும், அப்பிரதேச மக்களினதும் பிரச்சினைகளை நேரில் கண்டறியும் கள விஜயம் ஒன்றினை NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இன்று மேற்கொண்டார்.       NFGG யின் காத்தான்குடி பிரதேச சூறா சபையின் உறுப்பினரான ASM ஹில்மி அவர்களும் இக்கள விஜயத்தில் பங்கெடுத்திருந்தார்.

இன்று காலை 09.00 மணியளவில் அப்பகுதிக்குச் சென்ற பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அப்பிரதேச மீனவர்களின் முக்கிய தேவைகளைக் கேட்டறிந்து அவற்றில் முக்கியமான இரண்டு விடயங்களுக்கான உடனடித் தீர்வுகளையும் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததோடு அதற்கான நடவடிக்கைகளை இன்றே ஆரம்பித்திருக்கின்றார்.

மேலும், கடந்த நகரசபை நிர்வாகத்தினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அழிவுற்ற நிலையில் காணப்படும் மிதப்புப் பாதையின் நிலையையும் பார்வையிட்டதுடன் பொது மக்களின் அபிப்பிராயங்களையும் கேட்டறிந்து கொண்டார். காத்தான்குடி பொது மக்களின் வரிப்பணத்திலிருந்து பெருந்தொகை நிதி செலவு செய்யப்பட்டு திருகோணமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த மிதப்புப் பாதை ஆற்றுவழியான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
பின்னர் மேலதிக தொகை செலவு செய்யப்பட்டு மிதக்கும் உணவகமாக காத்தான்குடி முன்னாள் நகர சபை நிர்வாகத்தினால் பெரும் பரபரப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டங்கள் அனைத்தும் தோல்வியுற்று இம்மிதக்கும் பாதை அழிவுற்ற நிலையில் இம்மதப்பு பாதையானது இப்போது ஆற்றங்கரையில் ஒதுங்கிக் கிடப்பதையும் இதற்காக செலவு செய்யப்பட்ட பணம் பொறுப்பற்ற முறையில் வீணடிக்கப்பட்டிருப்பதையும் இப்பிரதேச மக்கள் கவலையுடன் NFGG பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினர்.
















Read More
avathani Media Network

2030 இற்குள் சந்திரனில் கிராமங்கள் அமைக்கப்படும்

2030 ஆம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் உருவாக்கப்படும் என விஞ்ஞானிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.
பூமியை தொடர்ந்து செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக சந்திரனில் மக்களை குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.
ஏற்கனவே சந்திரனுக்கு மனிதர்கள் சென்று கால் பதித்து விட்டனர். அதன் அடிப்படையில் அங்கு புதிய கிராமங்களை உருவாக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் ஏஜென்சி சந்திரன் 2020 – 2030 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது. அதில் விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வல்லுனர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகள், வருகிற 2030 ஆம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் உருவாக்கப்படும். அதற்கான உறுதியான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.
அதற்கான பரீட்சார்ந்த பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றனர்.
Read More
avathani Media Network

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விரைவில் விசேட நிதியம்

யுத்­த­த்தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை நோக்காகக் கொண்டு விசேட நிதி­ய­மொன்றை இவ்­வ­ரு­டத்தில் ஆரம்­பிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.
மேலும் சர்­வ­தேச வங்­கிகள் மற்றும் நாணய பரி­மாற்­றல்­களின் கேந்­திர நிலை­ய­மாக இலங்­கையை மாற்­றி­ய­மைக்க உள்ளோம். இந்த திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு கொழும்பு துறை­முக நக­ரத்தை பயன்ப டுத்தவுள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
மனித உரி­மை­யையும் தேசிய நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்பும் புதிய அர­சி­ய­ல­மைப்பு சர்­வ­ஜன வாக்­
கெ­டுப்­பிற்கு விடப்­படும். இதன்­போது நாட்டு மக்கள் பூரண ஆத­ர­வினை வழங்க வேண்டும் என் றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தேசிய இளைஞர் சம்­மே­ளன பிர­தி­நி­தி களை நேற்று அலரி மாளி­கையில் சந்­தித்து கலந்துரை யாடுகை யிலேயே பிர­தமர் மேற்­கண்­ட வாறு கூறினார்.
அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் குறிப்­பி­டு­கையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்­தி­யா­கி­யுள்­ளது.
இதன்­படி வருட பூர்த்­தியின் 52 ஆவது வாரத்தில் அர­சியல் ரீதி­யாக புதிய பய­ணத்தை ஆரம்­பிப்­ப­தற்­கான அத்­தி­வாரம் இடப்­பட்­டுள்­ளது. மேற்­படி புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிப்­ப­தற்­காக முழு பாரா­ளு­மன்­றத்தையும் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்றும் பிரே­ரணை சபையில் சமர்­ப்பிக்­கப்­பட்­டது. 21 நுற்­றாண்டின் வளர்ச்­சிக்கு ஏற்ப புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­படும்.
இந்­நி­லையில் மக்­க­ளு­டைய கருத்­துக்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து உரு­வாக்கப்ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­பினை பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றி­யதன் பின்னர் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு உட்படுத்துவோம். இதன்­போது நாட்டின் எதிர்­கா­லத்தை கருத்­திற்கு கொண்டு முழு நாட்டு மக்­களும் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு பூரண ஆத­ர­வினை வழங்க வேண்டும்.
நாட்டின் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­த­மையின் விளை­வாக 2016 ஆம் ஆண்டின் போது இலங்கை அர­சியல் ரீதி­யாக ஸ்திர­ம­டைந்து காணப்­படும் என்றும் சர்­வ­தேச பொரு­ளா­தாரம் சீர்­கு­லையும் சந்­தர்ப்­பத்தில் இலங்­கையின் பொரு­ளா­தார வளர்ச்சி வீதம் சிறப்­பான மட்­டத்தை காண்­பிக்கும் என்றும் சர்­வ­தேச பிர­நி­திகள் நம்­பிக்கை வெளியிட்ட வண்­ண­முள்­ளனர்.
கடந்த வரு­டத்தின் போது அர­சியல் ரீதி­யான விட­யங்­க­ளுக்கே நாம் முக்­கி­யத்­துவம் கொடுத்தோம். இருந்­த­போ­திலும் இந்த வரு­டத்தின் போது தொழில் பிரச்­சி­னைகள் மற்றும் பொரு­ளா­தார விட­ய ­தா­னங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­க­வுள்ளோம். இதன்­படி பாட­சாலை கல்வி ,தொழில் பயிற்சி, தொழில் வாய்ப்பு ,தகுந்த சம்­பளம் ,வீட்டு வச­திகள், சுகா­தாரம் ,ஓய்­வூ­தியம் மற்றும் வள­மான வாழ்க்கை என்ற சாதா­ரண மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு இந்த வரு­டத்தின் போது தீர்வு காணப்­படும். இதனை நோக்காகக் கொண்டு அதி­க­ள­வி­லான முத­லீட்­டா­ளர்­களை இலங்­கைக்கு அழைத்து வர­வுள்ளோம். கிராம இராஜ்­ஜிய திட்­டத்தின் ஊடாக முழு கிரா­மிய பொரு­ள­தா­ரமும் நிர்­வ­கிக்­கப்­படும். இதற்­காக விசேட சபை­யொன்றும் நிறு­வப்­படும். மேலும் சுற்­றுலா துறையை பாரி­ய­ளவில் மேம்­ப­டுத்­த­வுள்ளோம்.
நாட்டின் அபி­வி­ருத்­தி­யையும் பொரு­ளா­தா­ரத்­தையும் நோக்காகக் கொண்டு தொழில் நுட்பம் சுற்­றுலா விவ­சாயம் என்­ப­வற்­றுக்கு விசேட வல­யங்கள் உரு­வாக்­கப்­படும்.
இதே­வேளை சர்­வ­தேச நாணயத் துறை­யிலும் வங்கி கட்­டுப்­பாட்டு துறை­யிலும் இலங்­கையை உலகின் கேந்­திர நிலை­யமா மாற்­று­வ­தற்கு எத்­த­னித்­துள்ளோம். இந்த திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுப்­ப­தற்கு துறை­முக அபி­வி­ருத்தி நக­ரத்தை பிர­யோ­கிக்க உள்ளோம். இதற்­காக சட்­ட­ரீ­தி­யாக திருத்­தங்கள் முன்­னெ­டுக்­கப்­படும். பொரு­ளா­தார நலன் சார்ந்த திட்­டங்கள் தொடர்­பி­லான சட்­டத்­திட்­டங்­களில் பல்­வேறு குறைப்­பா­டுகள் நில­வு­கின்­றன. இவை­ய­ணைத்தும் நிவர்த்தி செய்­யப்­படும்.
அதே­போன்று முப்­பது வரு­ட­கால யுத்­தத்தின் கார­ண­மாக வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் பெரு­ம­ளவில் பாதிப்­ப­டைந்துள்ளன. இதன்­கா­ர­ண­மாக அப்­ப­குதி இளைஞர்கள் யுவதிகள் தொழி­லின்றி வாழ்க்­கையை கொண்டு செல்­கின்­றனர். யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்­கு­ரிய காணி­களை விடு­வித்து மீள்­கு­டி­யேற்­றத்தை துரி­தப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. ஆகவே இதனை அடிப்­ப­டை­யாக கொண்டு ஜப்­பானின் உத­வி­யுடன் விசேட பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மாநாட்டை வடக்கு கிழக்கில் நடத்­த­வுள்ளோம். இத­னூ­டாக வடக்கு கிழக்கின் அபி­வி­ருத்­திக்­காக விசேட நிதி­ய­மொன்று உரு­வாக்­கப்­படும்.
அத்­துடன் உலகில் அனைத்து நாடு­க­ளிலும் மொத்த தேசிய உற்­பத்­தியில் 80 சத­வீதம் மாந­க­ரங்­க­ளி­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே எதிர்­கா­லத்தில் இந்து சமுத்­தி­ரத்தின் பாரிய மாந­க­ர­மாக உருவாக்கும் நோக்குடனேயே மேல் மாகாணத்தை பாரிய மாநகரமாக உருவாக்கவுள்ளோம். இதற்கு சுமார் 20 வருடங்கள் தேவைப்படுகின்றன. மேலும் இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அபிவிருத்தி துறையிற்க ஏற்ற சட்டத்திட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற வேண்டியுள்ளது.
ஆகவே 2016 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடமாகும். இந்த வருடத்தில் யுக மாற்றமொன்றை ஏற்படுத்துவோம். தேசிய அரசாங்கத்தின் மாற்றமிகு வேலைத்திட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்றார்.
Read More
avathani Media Network

தமிழ்,முஸ்லிம்களை புறக்கணித்தால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் அபாயம் : சம்பிக்க

அனைத்து தரப்­பி­னதும் ஒத்­து­ழைப்பின் பிர­கா­ரமே அர­சி­ய­லமைப்பு திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்­களை புறக்­க­ணிக்கும் வகையில் இனியும் செயற்­பட முடி­யாது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.
இன­வாத அடிப்­ப­டையில் தொடர்ந்தும் செயற்­பட்டால் மீண்டும் நாட்டில் உரி­மைக்­கான போராட்டம் ஏற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எவ்­வா­றான யோச­னை­களை ஜாதிக ஹெல உறு­மய கட்சி முன்­வைக்கும் என வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
கடந்த 30 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இந்த நாட்டில் இன­வாத அடிப்­ப­டை­யி­லேயே அர­சியல் நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதி­கார ரீதி­யிலும் பெரும்­பான்மை சிறு­பான்மை என்ற அடிப்படையி­லேயே முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் நடந்­து­கொண்­டனர். நாட்டில் யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­னரும் அவ்­வா­றான நிலைமை தொடர்ந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
எனினும் இப்­போது அவ்­வா­றான ஒரு நிலைமை இல்லை. இன்று நாட்டில் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்­றி­ணைந்து ஒரு நல்­லாட்­சியை உரு­வாக்­கி­யுள்­ளனர். அந்த நல்­லாட்­சியில் இன­வா­தமோ மத­வா­தமோ இல்­லாது வடக்குஇ தெற்கு ஒன்­றி­ணைந்து செயற்­படும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. ஆகவே அவ்­வா­றான நிலையில் இந்த ஒற்­று­மையை தக்­க­வைக்கும் வகையில் அர­சாங்கம் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவே எதிர்­பார்க்­கின்­றது.
இப்­போது கிடைத்­தி­ருக்கும் சந்­தர்ப்­பத்தை நழு­வ­வி­டக்­கூ­டாது என ஜனா­தி­ப­தியும்இ பிர­த­மரும் எதிர்­பார்க்­கின்­றனர். அதேபோல் பிர­தான இரண்டு கட்­சி­களும் அதே நிலைப்­பாட்டில் தான் உள்­ளன. தமிழ், முஸ்லிம் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­களும் அவ்­வா­றான ஒரு நிலைப்­பாட்டில் உள்­ளனர். கடந்த காலத்தில் நாட்டை பிள­வு­ப­டுத்­தும்­வ­கையில் செயற்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் இன்று ஐக்­கிய இலங்­கையில் தமிழ் முஸ்லிம் மக்­களின் தீர்வு தொடர்பில் சிந்­திக்க ஆரம்­பித்­துள்­ளன.
ஆனால் அன்று யுத்­தத்தை வெற்­றி­கொண்ட தலைவர் உள்­ளிட்ட நாட்டை நேசித்த அணி­யினர் இன்று நாட்டில் மீண்டும் ஒரு குழப்பம் வர­வேண்டும் என்ற எதிர்­பார்ப்பில் செயற்­ப­டு­கின்­றனர். மீண்டும் புலிக்­க­தை­களை கூறியும் புலம்­பெயர் பிரி­வி­னை­வாத கதை­களை கூறியும் நாட்டில் இன ரீதி­யி­லான குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றனர். ஆகவே அதற்கு இட­ம­ளிக்கக் கூடாது.
எனவே இப்­போது ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் தெரி­வித்­துள்­ள­மைக்கு அமைய நாட்டில் சகல மக்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சியல் அமைப்பு திருத்­தத்தை ஏற்­ப­டுத்­த­வேண்டும். அனைத்து கட்­சி­க­ளி­னதும் ஆத­ர­வுடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வர வேண்டும். இப்­போதும் ஒரு சில­ரது தேவையை நிறை­வேற்றும் வகையில் பக்­க­ச்சார்­பான வகையில் செயற்­பட்டால் மீண்டும் நாட்டில் உரி­மைக்­கான போராட்டம் ஒன்று உரு­வாகும்.
ஆகவே தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தரும் வகையிலும் சிங்கள மக்களின் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் ரீதியிலும் செயற்பட வேண்டும் என நாம் விரும்புகின்றோம். எவரையும் புறக்கணித்து நாட்டில் ஐக்கியத்தை உருவாக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடு என்றார்.
Read More
avathani Media Network

மண் ஏற்றுவதற்கான அனுமதிகோரி மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்

மண் ஏற்றுவதற்கான அனுமதி பத்திரத்தை வழங்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் அரசடியில் இப்போராட்டம் இடம்பெற்றது. 
மாவட்ட எம்.பீ.வியாழேந்திரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- ஜவ்பர்கான்
Read More