Featured Home (TOP)

Recent Comments

Sunday, May 24, 2015

Unknown

இன்று நடைபெறவிருந்த NFGGயின் பொதுக்கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று (24.05.2015) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி குட்வில் சந்தியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் நடைபெற மாட்டாது என்று NFGG  தெரிவித்துள்ளது.
மேற்படிப் பொதுக்கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
Read More

Saturday, May 23, 2015

Unknown

வாக்காளர் இடாப்பில் மண்முனை முஸ்லிம்களை பதிவதற்கு கிராம உத்தியோகத்தர் மறுப்பு ..


மண்முனை பற்று பிரதேச எல்லைக்குள் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுடைய வாழ்வுரிமைகளைப் பறிக்கின்ற ஓர் திட்டமிடப்பட்ட செயல் கன கச்சிதமாக செயற்படுத்தப் பட்டு வருகின்றது.


ஒவ்வொரு வருடமும் குறிப்பிட எண்ணிக்கையான முஸ்லிம் மக்களை வாக்காளர் இடாப்புக்களில் இருந்து நீக்குவதனூடாக மண்முனை பற்று பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களை
நிருவாக செயற்பாட்டு ரீதியாக வெளியேற்றுகின்ற நடவடிக்கை மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
Read More
Unknown

வில்பத்து விவகாரம் முழுமையான அரசியல் இலாபநோக்கிலே சிலரால் கையாளப்படுகின்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவிப்பு

(ஊடகப்பிரிவு,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)
வில்பத்து விடயமாக வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் குறுக்கீடு செய்ததாக வடக்கு மாகாணசபையின் மற்றுமொரு எதிர்கட்சி உறுப்பினர் ஜவாஹிர் அவர்கள் ஊடகங்களிலே கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து உங்களது கருத்து என்ன என்று வடக்கு மாகாணசபையின் ஆளும்தரப்பு முஸ்லிம் உறுப்பினர் அ.அஸ்மின் அவர்களிடம் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில்..
Read More
Unknown

பெரியமடு கிராம மீள்குடியேற்றம் தொடர்பான பிரேரணை வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அ.அஸ்மின் அவர்கள் முன்வைத்தார்

(ஊடகப்பிரிவு,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)
21.05.2015 அன்று வடக்கு மாகாணசபையின் 29வது அமர்வின்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. .அஸ்மின் அவர்கள் முன்வைத்த ெரியமடு கிராம மீள்குடியேற்றம் தொடர்பான பிரேரணை மற்றும் அதன் பின்னணி விளக்கம்
பிரேரணை;  மன்னார் மாந்தை மேற்கு பெரியமடு கிராமத்தின் மீள்குடியேற்றத்தினை ஊக்குவிக்கும் அடிப்படையில் இராணூவத்தினரால் கையகபடுத்தப்பட்டுள்ள அம்மக்களின் விவசாயக் காணிகளை விடுவிப்பதற்கும், நீண்டகாலமாக செய்கை பண்ணப்படாதிருந்த விவசாயக் காணிகளை விவசாயத்திற்கு உகந்த விதத்தில் மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மத்திய மீள்குடியேற்ற அமைச்சையும், மாகாண விவசாய அமைச்சையும், மாகாண காணித் திணைக்களத்தினையும்  இச்சபை கோருகின்றது.
Read More