Featured Home (TOP)

Recent Comments

Wednesday, July 8, 2015

Unknown

மைத்திரியின் நிபந்தனைகளால் அதிர்ந்து போன மஹிந்ததரப்பினர்…!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நியமனக் குழுவுடன் நேற்று மைத்திரிபால சிறிசேன விஜேராம மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் நேற்று நடத்திய நீண்ட பேச்சுக்களை அடுத்து, வேட்பாளர் பட்டியலில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க முடிவு செய்துள்ள மைத்திரிபால சிறிசேன, அதற்காக பல நிபந்தனைகளையும் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற நிலையில் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில், மகிந்த ராஜபக்ச அணியினரும் கூடி ஆராய்ந்தனர். இதில் சுசில் பிரேம் ஜெயந்தவும் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் மகிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பளிக்கும் முடிவில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பல்வேறு தரப்பினருடன் நடத்திய ஆலோசனைகளை அடுத்து, சில நிபந்தனைகளுடன் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதென மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக நேற்றிரவு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, அம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே மகிந்த ராஜபக்ச போட்டியிட வேண்டும். அவரை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடியாது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக் குழுத் தலைவராகவோ அல்லது மாவட்டத்தின் தலைமை வேட்பாளராகவோ அறிவிக்க முடியாது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றினாலும் கூட மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதாக வாக்குறுதி அளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கமையவே பிரதமர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிபந்தனைகளின் படி, பிரதமராக நியமிக்கப்படாவிடின் சாதாரணமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே மகிந்த ராஜபக்ச இருக்க முடியும் என்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு போட்டியிட இடமளிப்பது குறித்தும், மைத்திரிபால சிறிசேன கடும் போக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால், தாமும் போட்டியிடுவேன் என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும் தெரிவித்துள்ளார். சந்திரிகாவின் நிலைப்பாடு தெளிவானது. அவர் தேசியப்பட்டியலின் ஊடாக வரமாட்டார். அவர் தேர்தலில் போட்டியிட்டு, மக்களின் வாக்குகளுடன் நாடாளுமன்றம் வருவார் என்று அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

tamilwin.lk
Read More
Unknown

கிழக்கில் 1 இலட்சம் வேலை வாய்ப்புக்கள்- முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை


கிழக்கு மாகாணத்தில் இரண்டு வருடத்திற்குள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பினை வழங்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


கிழக்கு மாகாணசபையின் மிகுதியாக உள்ள 2 வருட ஆட்சியில் கிழக்கிலுள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையிலும் ஒவ்வொரு சபையின் எல்லைக்குள்ளும் இரண்டாயிரம் (2000) பேர் வீதம் 45 சபைகளுக்கும் 90000 ஆட்களை நியமிக்கவும், அதற்கான ஆளணிகளுக்கான இடங்களைத் தேர்வு செய்யவும் சபைகளின் செயலாளர்களுக்கு முதலமைச்சரினால் பணிப்புரை
வழங்கப்பட்டுள்ளது.



ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் கண்காணிப்பிலும் ஒவ்வொரு (காமன்பெக்டரிகளை) ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலம் 650 வேலையாட்களை நியமிக்கும் பணிகளுக்காக முதலீட்டாளர்களுடனும், தொழிற்சாலைச் சங்கத்தினருடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்துள்ளதால் அவசரமாக அதற்கான வேலைகளை ஆரம்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளன.



கிழக்கிலிருந்து ஒவ்வொரு வருடமும் 15000 பதினையாயிரம் பணிப்பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்களை அங்கு செல்வதை நிறுத்தும் வகையில் இத்தொழில் வாய்ப்பின் மூலம் முற்றாக பணிப்பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்திவிடலாம், வறுமை நிலையினை முடிவுக்குக் கொண்டுவந்து வாழ்வாதாரத்தைக் கூட்டலாம் என்ற நல்ல நோக்கோடு அத்தொழில் வாய்ப்பினை ஏற்படுத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வந்துள்ளார்.



அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் வழங்கப்படவுள்ள இத்தொழில் வாய்ப்புக்கள் மூலம் கிழக்கில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்படுவதுடன் சுபீட்சமான வாழ்வியலுக்குள் மக்கள் திரும்பி விடுவர் என்ற நல்லெண்ணம் முழுமையாக இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.



இத்திட்டத்துக்கு கிழக்கில் உள்ள அனைவரும் ஒன்று பட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டார்.



கிழக்கு மாகாண சபையின் ஆட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் கூட்டாட்சியாக
இருக்கிறது. கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக
ஹாபிஸ் நஸீர் அஹமட் பதவி பொறுப்பேற்று வெறும் 5மாத காலத்தில் கிழக்கு மாகாணத்தில் நிரந்தர நியமனம்.1500 பேருக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிக நியமனம்.500 பேருக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளது.



தனியார் துறையில் 1000 பேருக்கு மேல் வேலை வாய்ப்புக்கள்  கொடுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.



(ஜுனைட்.எம் பஹ்த் )
Read More

Tuesday, July 7, 2015

Unknown

'இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள்' நூல் வெளியீட்டு விழா

(இன்பாஸ் சலா{ஹதீன்)

'இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள்' என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை வட பழனியிலுள்ள தமிழ்நாடு தொல்காப்பிய பேரவை ஆதித்தியா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.

எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சிவலிங்கம்  சதீஷ்குமார் எழுதிய இந்நூலின் முதற் பிரதியை  இலக்கிய செம்மல் குமரி ஆனந்தனிடமிருந்து புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் எச்.வீ.ஹாண்டே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலக்கிய செம்மல் குமரி ஆனந்தன், நடிகர் எஸ்.வீ.சேகர், பாரதிய ஜனதா தமிழ் நாடு துணைத் தலைவர் வானதி ஸ்ரீ நிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





Read More
Unknown

சஜின் வாஸ் குணவர்தனவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிர்வரும்  21 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பிலேயே இவர் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More