Featured Home (TOP)

Recent Comments

Friday, January 29, 2016

avathani Media Network

நான் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை


பாராளுமன்றத்தில் தான் நேற்று (28) கழ்த்திய உரையினூடாக ஊடகவியலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (29) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். 

பிரதமர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, 

ஒவ்வென்றுக்கும் பின்னால் இருப்பவர்கள் யார் என்று பெயர்களை குறிப்பிட்டேன். அது எமது உரிமையல்லவா? என்று கூறியுள்ளார். 

பத்திரிகைகளுக்கு அரசியல்வாதிகளின் பெயர் குறிப்பட முடியும் என்றால் ஏன் எமக்கு ஊடகவியலாளர்களின் பெயர்களை குறிப்பிட முடியாது. 

அவர்கள் கூறுகிறார்கள் தகவல் அறியும் சட்டம் ஒன்றை கொண்டு வருமாறு. அவ்வாறு கொண்டு வந்தால் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

நான் இங்கு குறிப்பிட்டது ஊடகங்களிற்குள்ளிருந்து வௌிவரும் கருத்துக்களையே. அரசியல்வாதிகளின் கருத்துக்களையல்ல என்றும் கூறியுள்ளர். 
Read More
avathani Media Network

கல்முனை பிரதான பஸ்தரிப்பிடத்திலிருந்து சடலம் கண்டெடுப்பு

கல்முனை பிரதான பஸ்தரிப்பிடத்திலிருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பஸ்தரிப்பிடத்திற்கு அருகிலிருந்து இந்த சடலம் சடலம் நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பெரிய கல்லாறு பகுதியைச் சேர்ந்த 45 வயதான தனியார் பஸ் நடத்துநர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-newsfirst.lk
Read More
avathani Media Network

ஸீகா வைரஸ் குறித்த சுகாதார அமைச்சர் அவதானம்

பல்வேறு உலக நாடுகளில் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் ஸீகா வைரஸிற்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்க தொற்று நோய் பிரிவிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆலோசனை வழங்கியுள்ளார். 

ஸீகா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நாட்டில் இல்லாவிட்டாலும் அதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். 

அமைச்சர் ராஜித சேனாரட்னவின் தலைமையில், சுகாதார அமைச்சு நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். 

ஸீகா வைரஸை எதிர்கொள்ளக் கூடிய வகையில் தயாராக இருக்குமாறு தொற்று நோய் பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள அமைச்சர், அதன் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி மக்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். 
Read More
avathani Media Network

SLMC தலைமைத்துவம் கருத்திற் கொள்ளுமா...?

முஸ்லிம் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க போராட்டக் களத்தில் மிக தீவிரமாக இயங்க மறைந்த தலைவர்  மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு மக்களின் இருப்பை உறுத்திப்படுத்தி உரிமைகளை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த போது எம்மனைவரையும் விட்டு மறைந்து சென்றார்.

அந்த தருணத்தில் இக்கட்டான சூழ்நிலையில் பல சூழ்ச்சிகளையும் தகர்த்து தற்போதைய தலைவர் சகோ.ரௌப் ஹக்கீம் கட்சியை சரியாக வழிநடத்திக்கொண்டிருக்கும் போது பல குள்ளர்களின் சதிகளும் அரங்கேராமலில்லை. அவற்றையெல்லாம் தர்த்தேரிந்து கட்சியை கொண்டு சொல்லும் போது தலைமைக்கு பல சவால்கள் வராமளுமில்லை. என்பதை சகலரும் நன்றாக அறிவோம்.

ஆனால் அம்பாரை,திருமலை,மட்டு  மாவட்டங்களை  பொறுத்தவரை கட்சி சற்று ஆட்டம் காண ஆரம்பிக்கிறது என்பதை கட்சி அறியாமளுமில்லை. ஆனால் கட்சி தலைமை சாணக்கியமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரமும் இதுவே.

கட்சியின் சார்பில் தற்போது அங்கம் வகிக்கும் ஆரம்ப கால போராளிகளை கௌரப்படுத்தி ஒரு புறம் வைத்து விட்டு கட்சிக்கு புது இரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் இது. அந்த வகையில் பழைய முகங்களையே மக்கள் ஆதரித்து அவர்களின் மீது அதிருப்தி கொண்டுள்ளதை நன்றாக சிந்திக்க கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது, எதிர்வரும் காலங்களில் நடைபெறப்போகும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது கட்சியின் கடமையாகும் .இதனையே மக்களும் விரும்புகின்றனர். 

அதிருப்தி கொண்ட மக்கள் கடந்த பொதுத்தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அடங்கலாக 40 ஆயிரத்திக்கும் மேலதிகமான வாக்குகள் சிங்கள சகோதர வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்தமையும் கட்சியின் நிர்வாகத்தின் கீளே  உள்ள கல்முனை மாநகர சபைக்கு முன் வைக்கப்படும் விமர்சனங்களும்  இதற்க்கு நல்ல உதாரணமாக கொள்ளலாம் 

அதே போன்று எதிர்வரும் காலங்களில் பழைய முகங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மக்கள் விரும்புவது போல புதிய முகங்களாக களமிறக்க வேண்டும். அடுத்த பொதுத்தேர்தலின் போது கல்முனை தொகுதியில் கல்முனையின் ராஜாவாக இருந்து செயலாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களின் மகனான ரஹ்மத் மன்சூரையும்,பொத்துவில் தொகுதியில் அட்டாளைச்சேனை மக்களுக்கு நீண்ட நாட்களாக ஆசைகாட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கதிரையை வழங்குவதற்காக வினைத்திறன் மிக்க மாகாண  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சகோ.ஏ.எல்.எம்.நசீருக்கும்,சம்மாந்துறை தொகுதியில் மக்கள் நலனை கருத்திற்கொண்டு  இம்முறை தேர்தலில் களமிறங்காது விட்டுகொடுத்து கட்சிக்கு பல வகையிலும் ஒத்தாசை புரிந்து வரும் பொறியலாளர் உதுமாங்கண்டு நாபீர் அவர்களையும் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு களமிறக்க வேண்டும் என்பது மக்களினதும்,புத்திஜீவிகளினதும்  கருத்தாக உள்ளது.

இவ்வாரன  ஆலோசனைகளை கட்சியும், தலைமையும் ஏற்று நடப்பதன் மூலம் பல குள்ளநரி தந்திரம் கொண்ட வர்களிடமிருந்து எமது மக்களின் உரிமைகளையும் கட்சியின் இருப்பையும் தக்க வைத்து கொள்ளலாம்.இதனை கட்சி கரிசனை கொள்ளுமா?????

சஜா எம்  அனஸ் 
Read More