Featured Home (TOP)

Recent Comments

Wednesday, May 6, 2015

Unknown

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் கிழக்கிலேயே கற்பிக்க வேண்டும்! (படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சிகளை முடித்து வெளியேறிய ஆசிரியர்களுக்கு நியமனம் வெளி மாகாணங்கள்,  மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையிலான குழுவினர் இன்று கல்வி அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசமை அவரது அமைச்சில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 1700க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எக்காரணம் கொண்டும் கிழக்கில் பயிற்சி முடித்த ஆசிரியர்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பும் முயற்சியை உடனே கைவிட்டு அவர்களுக்குரிய மாவட்டப் பாடசாலைகளிலேயே அவர்களை நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீ.மு.காங்கிரஸ் குழுவினர் கல்வி அமைச்சரை கேட்டுக்கொண்டனர்.
Read More
Unknown

மட்­டக்­க­ளப்பில் மர­முந்­தி­ரிகை அறு­வடை

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மர முந்­தி­ரிகை அறு­வடை ஆரம்­ப­மா­கி­யுள்­ளது என இலங்கை மர முந்­தி­ரிகை கூட்­டுத்­தா­ப­னத்தின் முகா­மை­யாளர் கே. சசி­தரன் தெரி­வித்தார்.

இலங்­கையில் ஆகக்­கூ­டு­த­லாக மர முந்­தி­ரிகை செய்கை பண்­ணப்­படும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இம்­முறை பத்­தா­யிரம் ஏக்­கரில் மர முந்­தி­ரிகை செய்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கிரான்­குளம், புதுக்­கு­டி­யி­ருப்பு, தாழங்­குடா, மண்­முனை மற்றும் ஏறாவூர் போன்ற பிர­தே­சங்­களில் மர முந்­தி­ரிகைச் செய்கை பண்­ணப்­பட்­டுள்­ளது.

மர முந்­தி­ரிகை அறு­வடை மே மற்றும் ஜூன் மாதங்­க­ளி­லேயே அதிகம் இடம் பெறு­கின்­றமை வழக்­க­மாகும். எனினும் இவ்­வாண்டு இதில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தாக மர முந்­தி­ரிகை உற்­பத்­தி­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

Read More
Unknown

நிந்தவூர் பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகம் முன்பாக அமைதியாக கவன ஈர்ப்புப் போராட்டம்.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்கள் நிந்தவூர் பிரதேச செயலகம் முன்பாக நேற்று அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினர்.

கடந்த அரசினாலும், இவ்வரசினாலும் தமக்கு வழங்குவதாக வாக்களிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இதுவரை தமக்கு வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்தே இக்கவனயீர்ப்புப் போராட்டம் இன்று இடம் பெற்றதாக கிராம சேவகர்கள் தெரிவித்தனர்.
Read More
Unknown

சிலைகளை அகற்றக் கோரி காத்தான்குடி நகரசபையில் NFGG பிரேரணை

(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)


அண்மையில் காத்தான்குடியில் திறந்துவைக்கப்பட்ட நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை சட்டபூர்வமாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ஒன்று காத்தான்குடி நகரசபையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் (NFGG) முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 23.04.2015 அன்று நடைபெற்ற நகரசபை அமர்வின்போதே NFGGயின் பிரதிநிதி SH.பிர்தௌஸ் அவர்களினால் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
அப்பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
Read More