Featured Home (TOP)

Recent Comments

Thursday, December 17, 2015

avathani Media Network

வலம்புரி கவிதா வட்டத்தின் 23வது பெளர்ணமி கவியரங்கு -24.12.2015

வலம்புரி கவிதா வட்டத்தின் 23து பெளர்ணமி கவியரங்கு கவிஞர்  அங்கையன் கைலாசநாதன்  அரங்காக எதிர்வரும் 24.12.2015 அன்று காலை 10.00 மணிக்கு வியாழக்கிழமை கொழும்பு-12 குணசிங்கபுர அல்-ஹிக்மா கல்லூரியில் காத்திபுல் ஹக் கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி  அவர்களின் தலைமையில் நடைபெறும். 

இவ்வரங்கில்  கவிஞர் வதிரி. சி. ரவீந்திரன் அவர்கள் சிறப்பதிதியாக கலந்துக் கொண்டு  கவிஞர் அங்கையன் கைலாசநாதன் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார். 

இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் 
என்.நஜ்முல் ஹுசைன்தலைவர்  0714929642 
இளநெஞ்சன் முர்ஷிதீன் செயலாளர் 0777388149 
ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.
Read More
avathani Media Network

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கானுக்கு- கவியருவி விருது வழங்கி கௌரவிப்பு-படங்கள்.

பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் மலேசிய எழுத்தாளர் சங்கமும்இகனேடிய படைப்பாளிகள் உலகமும்இ தடாகம் கலை இலக்கிய வட்டத்ததுடன் இணைந்து நடாத்திய விருது  விழாவில் கவியருவி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 
கடந்த 15 செவ்வாய்க்கிழமை திருகோணமலை சண்சைன் மண்டபத்தில தடாகம் அமைப்பாளர் தமிழ்மாமணி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி தலைமையில் நடைபெற்ற விழாவில் கனேடிய படைப்பாளிகள் உலக தலைவர் கவிஞர் ஐங்கரன் விருது வழங்குவதையும் ,மகுடம் பிரதம ஆசிரியர் தமிழ்மணி வீ.மைக்கல் கொலின் மாலை அணிவிப்பதையும் அருகில் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் கவிஞர் ராஜேந்திரன் உட்பட அதிதிகள் நிற்பதையும் படங்களில் காணலாம்.




Read More
avathani Media Network

கல்முனை நஸீறா அலிக்கு சிறுவர் இலக்கியத்துக்கான கலாபூஷண விருது

(சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்)

மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் 2015ம் ஆண்டுக்கான அரச கலாபூஷணம் விருது வைபவம் கடந்த 15ஆம்; திகதி கலாசார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில் நடைபெற்றது. இதில் 25 முஸ்லிம் கலைஞர்கள் கலாபூஷண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சிறுவர் இலக்கியத்திற்கான கலாபூஷண விருதை கல்முனை ஏ.ஏ. பாத்திமா நஸீறா பெற்றுக் கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.

Read More
avathani Media Network

மை வீசிய மாணவர்கள் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில் காத்தான்குடியில் சம்பவம்.

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடியில் பிரபலமான பாடசாலை ஒன்றில்  கல்வி பயின்று இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை எழுதி விட்டு வழமை போன்று நண்பர்களுடன் சேர்ந்து ஒருவர் மற்றவர் மீது இறுதி நாளான இன்று வீதியில் மையடிக்கும் கலாசாரத்தினை மேற் கொண்ட வேளை அவ்வீதியால் வந்த சிலர் மேற் கொண்ட அதிரடி தாக்குதலினால் இரு மாணவர்கள் வைதியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேற்படி தாக்குதலுக்கு இலக்காகி காத்தான்குடி வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட முஹம்மது அதாயி மற்றும் எம்.லப்ரி என்ற மாணவர்களை நேரினில் சென்று  பார்வையிட்ட போது.......

பரீட்சை இறுதி நாள் இன்று என்பதனால் நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வீதியில் வழமை போன்று ஒரவருக் கொருவர் நாங்கள் மையடித்து கொண்டிருந்த வேளை வீதியால் சிகப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட மேலும் சிலர் எங்கள் மீது சாரமாரியாக தாக்குதலை மேற் கொண்டு விட்டு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்ததோடு தாங்க  முடியாத வலியின் காரணமாகவே எமது ஏனைய மாணவர்கள் மூலம் தாங்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக கவலையோடு தெரிவித்தனர்.

மாணவர்களாகிய நாங்கள் இவ்வாறான செயலில் ஈடுபடுவது என்பது தவிர்க்கப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும் மாணவர்களாகிய எங்களை வீதியில் வைத்து தாக்குவது என்பது சட்டவிரோதமாகும் என்பதுடன் இவ்வாறு எங்களை தாக்குவதற்கு  இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் மாணவர்கள் தங்கள் கவலையினை தெரிவித்தனர்.

மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை  தேவை ஏற்பட்டால் நாங்கள் அடையாளம் காட்ட தயாராக இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க.......

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவிகள் இன்று மையடித்து தங்கள் மகிழ்ச்சியினை வெளியிட்டதினையும் காணக்கூடியதாக இருந்தது. 








Read More