எமது களச் செய்தியாளர்.
காத்தான்குடி டெலிகொம் வீதி மோதினார் லேனைச் சேர்ந்த முஹம்மது றிகாஸ் வயது 16 இன்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளார்.
கூலி வேலை செய்யும் முஹம்மது பாறூக் (கனீபா) அவர்களின் மூத்த புதல்வாரன இவர் அண்மைக்காலமாக எதிலுமே கவனமற்ற நிலையில் இருந்ததாகவும் இன்று (17.02.2015) மாலை 6.00 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இவரது குடும்பத்தில் ஐந்து பேர் உள்ள நிலையில் வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த நேரம் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இம்மரணம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
