வி. மைக்கல் கொலின்
மகுடம் கலை இலக்கிய வட்டம் பௌர்ணமி தினங்களில் நடாத்திவரும் பௌர்ணமி கலை நிகழ்வின் தொடர் அமர்வின் ஒன்பதாவது விசேட அமர்வு இன்று 22-02-2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு மட்/பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
. இதில் ' ' மொழியும் பண்பாடும் "என்ற தலைப்பில் - அமெரிக்காவைச் சேர்ந்த மானுடவியல் பேராசிரியர் பேனாட் பேட் (Bernard Bate) Yale - NUS கல்லூரி , சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் " அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு அவர்கள் தலைமையில், நடைபெற்றதும் இந்நிகழ்வில் .வரவேற்புரையினை மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கவிஞர் வி. மைக்கல் கொலின் நிகழ்த்தினார்
பார்வையாளர் பதிவில் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த பிரபல எழுத்தாளர் லெ. முருகபூபதி , சிங்கப்பூரில் இருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு , கலாநிதி அனோஜா சித்தார்த்தன், பேராசிரியர் சி. மௌனகுரு, பேராசிரியர் செ.யோகராசா ,மற்றும் பலர் உரையாற்றினர் .




