Featured Home (TOP)

Recent Comments

Tuesday, February 24, 2015

Unknown

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யும் போதே தேர்தல் முறையிலும் மாற்றம் வேண்டும்

கொழும்பு -
புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்­டத்தின் கீழ் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் செய்­யும்­போதே தேர்தல் முறை­யிலும் மாற்றம் செய்­து­வி­ட­வேண்டும். இல்­லா­விடின் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி ஒரு­போதும் ஆத­ரவு வழங்­காது என்று கட்­சியின் பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் செய்­யும்­போதே தேர்தல் முறை­யிலும் மாற்றம் செய்­வ­தற்கு சுதந்­திரக் கட்சி தனது முழு­மை­யான ஆத­ரவை வழங்கும். இதற்கு 100 நாள் அல்ல 200 நாட்­க­ளையும் எடுத்­துக்­கொள்­ளுங்கள் பர­வா­யில்லை. மேலும் எமது ஆத­ரவு இன்றி எத­னையும் செய்ய முடி­யாது என்­ப­த­னையும் மறந்­து­வி­ட­வேண்டாம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
ஒரு­வேளை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தேர்தல் முறையில் மாற்­றத்தைக் கொண்டு வர விரும்­பா­விடின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதனை தைரி­ய­மாக கொண்­டு­வ­ரலாம். அதற்கு ஆத­ரவு வழங்க நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். இவை தொடர்­பாக கட்­டு­நா­யக்­கவில் இடம்­பெற்ற செய­ல­மர்­வின்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டினோம் என்றும் டிலான் பெரேரா குறிப்­பிட்டார்.
கட்­டு­நா­யக்­கவில் இடம்­பெற்ற சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்­கான செய­ல­மர்வு தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இந்த செய­ல­மர்வை முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவே ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.
இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா இது தொடர்பில் குறிப்­பி­டு­கையில்,
புதிய அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணை ஒன்றை வழங்­கி­யுள்­ளனர். அதா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றி­ய­மைத்து தேர்தல் முறையையும் மாற்­று­வ­தற்கு மக்­களின் ஆணைகிடைத்­துள்­ளது. இந்­நி­லையில் 100 நாள் வேலைத்­திட்­டத்தின் கீழ் இதனை அர­சா­ங்கம் செய்­ய­வேண்டும். அதற்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தற்கு சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தயா­ராக இருக்­கின்­றது.
ஆனால் தேர்தல் முறை­மையை மாற்­றாமல் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மட்டும் மாற்­று­வ­தற்கு சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி ஒரு­போதும் கையை உயர்த்­தாது. எமது ஆத­ர­வின்றி அர­சாங்­கத்­தினால் எந்த மாற்­றத்­தை­யும்­செய்ய முடி­யாது என்­ப­த­னையும் மறந்­து­வி­டக்­கூ­டாது.
எனவே புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்­டத்தின் கீழ் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் செய்­யும்­போதே தேர்தல் முறை­யிலும் மாற்றம் செய்­து­வி­ட­வேண்டும். இல்­லா­விடின் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி ஒரு­போதும் ஆத­ரவு வழங்­காது. அதனை மிகவும் தெளி­வாக குறிப்­பி­டு­கின்றோம்.
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் செய்­யும்­போதே தேர்தல் முறை­யிலும் மாற்றம் செய்­வ­தற்கு சுதந்­திரக் கட்சி தனது முழு­மை­யான ஆத­ரவை வழங்கும். இதற்கு 100 நாள் அல்ல 200 நாட்­க­ளையும் எடுத்­துக்­கொள்­ளுங்கள் பர­வா­யில்லை. ஆனால் ஜனா­தி­பதி முறைமை மாற்­றத்­துடன் தேர்தல் முறை­மை­யிலும் மாற்றம் வர­வேண்டும். தவிர்த்து ஜனா­தி­பதி முறை­மையில் மட்டும் மாற்­றத்தை செய்ய முயற்­சிப்­பார்­க­ளாயின் அதற்கு ஆத­ரவு வழங்­க­மாட்டோம் என்­ப­தனை குறிப்­பி­ட­வேண்டும்.
மேலும் தேர்தல் முறை­மையை மாற்­று­வ­தற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் இல்லாமல் இருந்தால் அந்த பணியை ஜனாதிபதி செய்யலாம். ஜனாதிபதி தேர்தல் முறைமையையும் மாற்றும் யோச னையை தைரியமாக கொண்டுவரலாம். நாங்கள் ஆதரவு வழங்குவோம். எனவே இந்த விடயத்தை அரசாங்கத்துக்கு நாங்கள் தெளிவான முறையில் கூறுகின்றோம் என்றார்.
Sourec- Virakesary 

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :