Featured Home (TOP)

Recent Comments

Tuesday, February 24, 2015

Unknown

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்களின் விடுதலை பிற்போடப்பட்டுள்ளது.



ஜுனைட்.எம்.பஹ்த். 

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளஇலங்கையர்கள் மூவரையும்விடுதலை செய்வது தொடர்பானகலந்துரையாடல், எதிர்வரும் 27 ஆம்திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சவூதி அரேபிய அதிகாரிகளால்தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவெளிநாட்டுவேலைவாய்ப்புஅமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுடள்ளார்.

இதற்கமைய, இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் பிரதிநிதியான அமைச்சர்ரவூப் ஹக்கீம் எதிர்வரும் 27ம் திகதி சவூதி அரேபியாவுக்கு சென்று. இந்தக்கலந்துரையாடலை நேற்றைய தினம் முன்னெடுப்பதற்கு இதற்குமுன்னர்தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மூவரையும்விடுதலை செய்வது தொடர்பில் சவூதி மன்னருடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம்எதிர்வரும் 27 ஆம் திகதி கலந்துரையாடுவார் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பதில் வெளியிடப்படும் வரையில்,இலங்கையர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படமாட்டாதென அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் கூறினார்.

2007 ஆம் ஆண்டு யேமன்பிரஜையைகொலைசெய்தமைதொடர்பில் மூவருக்கும் சவூதி நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன், அந்தத் தண்டணை சவூதி உயர் நீதிமன்றத்தினால்அண்மையில்உறுதிசெய்யப்பட்டிருந்தது.

கொள்ளை மற்றும் கொலை தொடர்பில் இவர்கள் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அடையாளம்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :