கொழும்பு - விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற சபை அமர்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே கோட்டை நீதவான் நீதிபதி திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
