புத்தளம் - கடந்த நான்கு வருடங்களில் இலங்கையிலுள்ள முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கு இடம்பெற்ற மோஷமான இனவாத வன்முறை நிகழ்வுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோர் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் காலத்திற்குள் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் ஒழிக்கப்படும் என தாம் நம்புவதாகவும் அக்கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
