Featured Home (TOP)

Recent Comments

Thursday, February 19, 2015

Unknown

மக்­களின் பணத்தை மோசடி செய்­த­வர்கள் நாட்­டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த முன்­வ­ராமை ஆச்­ச­ரி­ய­மல்ல

கொழும்பு - 
மக்­க­ளு­டைய பணங்­களை மோசடி செய்­த­வர்கள் தேசிய அர­சாங்கம் அமைத்து நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த முன்­வ­ராமை ஆச்­ச­ரி­யப்­பட வேண்­டிய விட­ய­மல்ல என வீட­மைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.
தேசிய அர­சாங்­கம் என்ற பேச்­சுக்கு இட­மில்லை என சுசில் பிரே­ம­ஜ­யந்த எம்.பி தெரி­வித்த கருத்து தொடர்பில் ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கு பதில் வழங்­கும்­போதே அவர் இதனை தெரி­வித்தார்.

பத்­த­ர­முல்லை செத்­சி­றி­பா­யவில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போது அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனது ஆட்­சியின் போது மக்­க­ளு­டைய வறு­மையை போக்க எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. அபி­வி­ருத்தி என்ற பெயரில் ஊழல் மோசடி செய்து தமது குடும்­பங்­க­ளையே போஷித்தார்.
வீட­மைப்பு மற்றும் சமுர்த்­தியில் பல்­வேறு ஊழல்­களும் இடம்­பெற்­றுள்­ளன. இது தொடர்பில் ஆராய்­வ­தற்கு தனிக் குழுக்கள் அமைத்­தது மாத்­தி­ர­மன்றி சர்­வ­தேச கணக்­காய்வு குழு­வொன்றும் இல­வ­ச­மாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.
எனவே, சமுர்த்தி என்­பது மக்­க­ளு­டைய பணங்­களை கொண்டு நாட்டின் வறு­மையை போக்­கு­வ­தாகும். எனினும் முன்­னைய அர­சாங்கம் இதற்கு நிதி­யையும் ஒதுக்­கி­ட­வில்லை.
இந்­நி­லையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பொது செய­லாளர் தேசிய அர­சாங்கம் என்ற பேச்­சுக்கு இட­மில்லை என கூறி­யுள்ளார். இது ஆச்­ச­ரி­யப்­பட வேண்­டிய விட­ய­மல்ல. நாட்டில் மக்­க­ளு­டைய பணங்­களை மோசடி செய்­த­வர்கள் நல்­லாட்­சிக்கு உத­வாமை பெரிய ஆச்­ச­ரி­ய­மல்ல.
நாம் ஆட்சி பீடத்தில் அமர்ந்­தி­ருக்கும் வரை ஒரு சத­மேனும் ஊழல் செய்யப்போவ­தில்லை. மக்­க­ளு­டைய பணங்களை மக்களுக்கே வழங்குவோம். ஆட்­சி­யா­ளர்கள் உழைத்­த காலத்திற்கு முடிவுகட்டிவிட்டு அப்பாவி மக்கள் வாழ்க்­கையை விடி­வுக்கு கொண்டுவரு­வோம் என்­றார்.

Source - Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :