எமது செய்தியாளா் -
சப்ரகமுவ பல்கலைக்கழகததில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் அமலா வயது 23 என்ற மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகமயைப் சேர்ந்த இந்த மாணவி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவி தற்கொலை செய்வதற்கு முன் எழுதிவைத்துள்ள கடிதத்தில் தான் இறந்த பின் தனது உடலை சக மாணவர்களுக்கு காட்ட வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மாணவியின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.
