கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னால் காத்தான்குடி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முழுநாட்டுக்குமாக பரிணமித்திருக்கும் NFGG (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) யின் செயற்பாடுகளை தமது அமைப்பு விரவேற்பதாகவும் அதன் வேலைத்திட்டங்களுக்கு பூரண ஆதரவ வழங்குவதாகவும் கிண்ணியாவைத் தளமாகக் கொண்டியங்கும் AMR Welfare Foundation அமைப்பின் தவிசாளர் ஜெர்சாத் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் ஊடாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் தனது பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு ஒரு தூய அரசியல் சிந்தனையை மக்கள் மனங்களில் விதைத்து புதியதோர் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி வரும்NFGG. இன மதம் பாராமல் எல்லோர் மனங்களிலும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் - ஊடகச் செயலாளா் . K.றிப்னாஸ் -
தகவல் - ஊடகச் செயலாளா் . K.றிப்னாஸ் -
