Featured Home (TOP)

Recent Comments

Saturday, February 7, 2015

Unknown

நாட்டின் வரிவருமானத்தின் நூறு வீதத்தையும் ராஜபக்ஷ குடும்பத்தினரே நிர்வகித்து வந்தனர்

கொழும்பு  - 

நாட்டின் வரி­வ­ரு­மா­னத்தின் நூறு வீதத்­தையும் அதே­போன்று மொத்த தேசிய வரு­மா­னத்தில் 19 வீதத்தைத் தவிர்ந்த ஏனைய நிதி­யி­னையும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ ஆகிய ராஜபக்ஷ குடும்­பத்­தி­னரே நிர்­வ­கித்து வந்­த­தாக நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க, முன்­னைய அர­சாங்­கத்தின் நான்கு வருட ஆட்சிக் காலத்தின் நாச­கார பொரு­ளா­தார முறைமை தொடர்ந்தும் நீடிக்க அனு­ம­திக்கக் கூடாது என்ற வகை­யி­லேயே நாம் இன்­றைய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம் என்றும் குறிப்­பிட்டார்.




பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற புதிய அர­சாங்­கத்தின் இடைக்­கால வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்கண்­ட­ வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இங்கு மேலும் கூறு­கையில்,

அமைந்­தி­ருக்கும் புதிய அர­சாங்­கத்தின் நூறு நாள் வேலைத்­திட்­ட­மா­னது அர­சியல் ரீதி­யி­லான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. நூறு நாள் வேலைத்­திட்­டத்தின் பின்னர் அமை­ய­வி­ருக்­கின்ற புதிய அர­சாங்­கத்­தி­லேயே அபி­வி­ருத்தி உள்­ளிட்­ட­தான நட­வ­டிக்­கை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும்.

இடைக்­கால வரவு செலவுத் திட்­டத்தை இங்கு சமர்ப்­பிப்­ப­தற்கு முன்­ப­தா­கவே நாம் எரி­பொ­ருட்­களின் விலை­களை குறைத்­தி­ருக்­கின்றோம். அர­சியல் சமூக
பொரு­ளா­தார மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இடைக்­கால வரவு செலவுத் திட்­டத்­தையும் முன்­வைத்­தி­ருக்­கின்றோம். மஹிந்த அர­சாங்­கத்தில் எரி­பொ­ரு­ளுக்கு பாரி­ய­ளவில் வரி­களை அறவிட்டு நாச­கார பொரு­ளா­தார முறை­மை­யொன்று முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது. இதனை தடுத்து நிறுத்தும் பொருட்டே மாற்றம் ஒன்­றினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம். 

மஹிந்த அர­சாங்­கத்தில் கடந்த நான்கு வருட ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொரு­ளா­தாரப் பய­ண­மா­னது தீய வழி­யி­லேயே சென்று கொண்­டி­ருந்­தது. நாட்டு மக்­களின் குடும்ப வரு­மானம் வீழ்ச்­சி­கண்ட அதே­வேளை தேசிய ரீதியில் நாட்டின் வரு­மா­னங்கள் பாரி­ய­ளவில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருந்­தன.

நாடு பெற்­றுக்­கொண்ட வரி­வ­ரு­மா­னத் தின் நூறு வீதத்­தி­னையும் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ மற்றும் கோத்­த­பாய ராஜபக்ஷ ஆகிய ராஜபக் ஷர்­களின் குடும்­பங்­களும் அவர்­க­ளது உற­வி­னர்­களும் நண்­பர்­க­ளுமே நிர்­வ­கித்து அனு­ப­வித்து வந்­தனர். அதே­போன்று நாட்டின் மொத்த தேசிய வரு­மா­னத்தின் 19வீதம் தவிர்ந்த ஏனைய அனைத்து பகு­தியும் மேற்­கூ­றப்­பட்­ட­வர்­க­ளா­லேயே நிர்­வ­கிக்­கப்­பட்டு வந்­தது. இத்­த­கைய நாச­கார பொரு­ளா­தார முறை­மையை தொடர்ந்தும் நீடிக்­க­விட அனு­ம­திக்க முடி­யாது என்ற ரீதி­யி­லேயே நாம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

அடுத்த மாதமளவில் மேலும் சில மாற்றங்களை ஏற்ப டுத்துவதற்கு எண் ணியிருக்கின்றோம். அதாவது எரிபொருள் விலை மற்றும் மின் சாரக் கட்டணம் ஆகி யவற்றில் நிலையான கொள்கை ஒன்றினை அறிமுகப்படுத்து வதற்கும் நடவ டிக்கைகளை மேற் கொண்டு வரு கின்றோம் என்றார்.

நன்றி வீரகேசரி

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :