Featured Home (TOP)

Recent Comments

Monday, March 16, 2015

Unknown

19 ஆவது திருத்தத்திற்கு அங்கீகாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை பணிப்பு

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்­கு­ரிய அதி­கா­ரங்கள் குறைப்பு உள்­ளிட்ட சில சரத்­துக்­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக 19ஆவது திருத்­தச்­சட்­டத்தின் உத் ­தேசவரை­வுக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.
இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளியி­டு­மாறு அரச அச்­ச­கத்­திற்கு அமைச்­ச­ரவை அறி­வித்­துள்­ளது. அத்­துடன் தக­வ­ல­றியும் சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பிக்கவும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. எனினும் தேர் தல் முறை­மையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வது தொடர் பில் அமைச்­ச­ர­வையில் இணக்கம் காணப்­ப­ட­வில்லை என தெரி­ய­வந்­துள்­ளது.

நேற்­றை­ய­தினம் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் இடம்பெற்­றது. இக்­கூட்டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்­சித்­த­லைவர் நிமல் சிறி­பால டிசில்வா, முன்னாள் அமைச்­சர்­க­ளான அநு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா, பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ், வாசு­தேவ நாய­ணக்­கார, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யூதீன், அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய கட்­சி­களின் தலை­வர்கள் இக்­கூட்­டத்­தில்­பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.
இத­னைத்­தொ­டர்ந்து விசேட அமைச்­ச­ரவை கூட்டம் நேற்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போதே மேற்­கண்­ட­வாறு சில சரத்­துக்கள் தொடர்பில் இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­துடன் அதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.
இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
தற்­போது காணப்­படும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையில் ஜனா­தி­பதி இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் பதவி வகிக்க முடி­யாது. பாரா­ளு­மன்றம் நிறு­வப்­பட்டு ஓராண்­டுக்கு பின்னர் அதனை கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு கிடை­யாது. புதிய திருத்­தங்­களின் அடிப்­ப­டையில் நான்கு ஆண்­டுகள் நிறை­வுறும் வரையில் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடி­யாது. சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வுதல் ஆகி­ய­வற்­றுக்கு சட்டத் திருத்­தங்­களில் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக ஜனா­தி­பதி படை­களின் சேனா­தி­பதி, அமைச்­ச­ர­வையின் பொறுப்­பாளர், அமைச்­சர்­களை நிய­மிக்கும் அதி­கா­ரங்கள் என்­பன தொடர்ந்தும் அமு­லி­லேயே காணப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
19ஆவது திருத்­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள தகவல் அறியும் உரி­மை­யா­னது அடிப்­படை உரி­மை­யாக பார்க்­கப்­ப­டு­கி­றது. ஜன­நா­யக சமூகம் ஒன்றின் நீடிப்­புக்­காக தாக்கம் செலுத்தும் தேசிய பாது­காப்பு, தேசிய ஒரு­மைப்­பாடு, மக்கள் பாது­காப்பு, குற்­றங்­களை தடுத்தல் சுகா­தார பாது­காப்பு, ஏனை­ய­வர்­களின் உரி­மை­களை பாது­காத்தல்,தனிப்­பட்ட தன்­மையை பாது­காத்தல்இ இர­க­சி­ய­மாக பெரும் தக­வல்கள் வெ ளியி­டப்­ப­டு­வதை தடுத்தல்இ நீதி­மன்­றத்தின் சுயா­தீ­னத்­தன்­மையை பாது­காத்தல், ஆகி­ய­வற்றை தவிர்த்தல் ஏனைய அனைத்து விட­யங்கள் தொடர்­பாக தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்ளும் உரிமை மக்­க­ளுக்கு உள்­ளது என்ற சட்­ட­மூ­லத்­திற்கும் அமைச்­ச­ரவை அங்­கி­கா­ர­ம­ளித்­துள்­ளது.
அதே­நேரம் குறித்த 19ஆவது திருத்­தச்­சட்ட வரை­வா­னது அவ­சர சட்ட மூல­மாக பாரா­ளு­மன்றில் சமர்­பிக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் வர்த்­த­மான அறி­வித்­தலைத் தொடர்ந்து சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­னூ­டாக உயர் நீதி­மன்­றுக்கு சட்ட வியாக்­கி­யா­ணத்தைக் கோரு­வ­தற்­காக அனுப்­பி­வைக்­கப்­படும். அத­னைத்­தொ­டர்ந்து சில தினங்­களில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
62 பக்­கங்­களைக் கொண்ட 19 வது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்­பான சட்­ட­மூலம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த புதன்­கி­ழமை இட­ம­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்­பான சட்­ட­மூ­லத்தை வாசித்து ஆராய்­வ­தற்கு கால­அ­வ­காசம் அவ­சியம் என சில அமைச்­சர்கள் அறி­வித்­தி­ருந்­தனர் இதனால் அவ் அமைச்­ச­ரவை அமர்வின் போது 19 வது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்­பாக இறுதி இணக்­கப்­பாட்­டிற்கு வரக் கூடிய சாத்­தியம் ஏற்­ப­ட­வில்லை.
அவ்­வா­றி­ருக்­கையில் நேற்­யை­தினம் நடை­பெற்ற கூட்­டத்தின் போது தேர்தல் முறைமை தொடர்பில் இணக்­க­பாடு எட்­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. இதனால் இவ்­வி­டயம் தொடர்­பாக தொடர்ந்தும் கட்­சிகள் கலந்­து­ரை­யா­ட­வி­ருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. குறிப்­பாக தேர்தல் முறைமை தொடர்­பாக ஏற்­பட்­டுள்ள கருத்து வேறு­பா­டு­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­காக அர­சாங்­கத்தில் இடம்­பெற்­றுள்ள கட்சி தலை­வர்கள் நாளை­ய­தினம் செவ்­வாய்­கி­ழமை மீண்டும் சந்­திக்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.
அதே­வேளை நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் சட்­ட­மூலம் மற்றும் தேர்தல் முறை­மையில் திருத்­தங்­களை ஏற்­ப­டுத்தும் சட்­ட­மூலம் ஆகிய இரண்­டையும் ஒன்­றா­கவே பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் உறு­தி­யா­க­வி­ருக்கும் சுதந்­திரக் கட்சி இன்­றைய தினம் அவ்­வி­டயம் தொடர்ந்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­வ­துடன் இதன்­போது தேர்தல் முறைமை தொடர்­பா­கவும் விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.
முன்­ன­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசியலமைப்பு மாற்றங்கள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் விரைவில் முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் அரசாங்கம் முன்வைக்கவுள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தின் நகல் வரைபு ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் கடந்தவாரம் இடம் பெற்ற அரசாங்கத்தின் நிறைவேற்று சபைக்கூட்டத்திலும் இந்த நகல்வரைபுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் கிடைத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :