கொழும்பு, கொம்பனித்தெரு, ஜாவா ஒழுங்கை, மலாய் வீதி பிரதேசங்களில் இந்திய வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப் பட்டுள்ள நிலப்பரப்பில் அமைந்திருந்த வீடுகளில் வசித்து வந்த குடியிருப்பாளர்களுக்கும், அங்கு வியாபார நிலையங்களை வைத்திருந்த அவற்றின் உரிமையாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதாக நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கொம்பனித் தெருவில் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஜாவா ஒழுங்கை, மலாய்வீதி உள்ளிட்ட பிரதேசங்களில் நகரஅபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கைகளினால் தமது வீடுகளையும், வியாபார நிலையங்களையும் இழந்தோர் அவரது அமைச்சில் இன்று (12) முற்பகல் சந்தித்து தமது அவலங்களை எடுத்துக்கூறிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
