மூத்த தமிழ் ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர்கள் சிலருக்கு ஊடக உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் மூத்த தமிழ் ஊடகவியலாளர்களான சின்னத்துரை சண்முகராஜ், பாலசிங்கம், இளையதம்பி பாக்கியராசா, கந்தசாமி அரசரட்னம், கருப்பையாப்பிள்ளை லோரண்ஸ் கூஞ்ஞே ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜேசப் கலந்து கொண்டார்.
பத்திரிகை நிருபர்கள், பிரதேச ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள், புகைப்படக் கருவிகள், பெக்ஸ் மெசின்கள், வொயிஸ் ரேக்கோடர்கள் என்பன இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன.
Virakesary
