"அகர ஆயுதம்" இலக்கிய உரையாடலுக்கும் சந்திப்பிற்குமான பொதுவௌியின் தொடர் அமர்வின் அடுத்த அமர்வு எதிர்வரும் 2015-03-22ம் திகதி பொத்துவில் பிரதேச சபைக் கட்டடத்தில் நடைபெறவிருக்கின்றது.
மூத்த இலக்கியவாதி கலையன்பன் அஸீஸ் தலைமையில் காலை 8.30 மணிதொடக்கம் 2.00 மணிவரை நடைபெறவிருக்கும் இந்நிகழ்வானது காலை, மதிய உணவுகளுடன் முழுநாள் சுவையான இலக்கிய அமர்வாக இடம்பெறவிருக்கின்றது.
மூத்த , இளம் எழுத்தாளர்கள் கவிஞர்கள் கலைஞர்கள் விமர்சகர்கள் துறைசார்ந்த பேச்சாளர்கள் என பலரும் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் பொத்துவில் கலைஞன் றிஸ்வி அவர்களின் மற்றுமொரு திறமையான "கீறல்" திரைப்படமும் காண்பிக்கப்படுவதுடன் பகலுணவின் பின் -சந்தக்கவிமணி- கிண்ணியா அமீர் அலியின் தலைமையில் சிறப்புக் கவியரங்கும் இடம்பெறவிருக்கின்றது.
இப் பொதுவௌி அமர்வில் எழுத்தாளர்கள், கலைஞர்களின் வௌியீடுகளையும் காட்சிப்படுத்தவுள்ளதால் பங்குகொள்ளும் கலைஞர்கள் ,எழுத்தாளர்கள் தங்களது வௌியீடுகளை கொண்டுவருவது வரவேற்கப்படுகின்றது.
நிகழ்வில் பங்குகொள்வோர் எமது மின்னஞ்சல் முகவரியான Aharam.world@gmail.com எனும் முகவரியூடாகவோ அல்லது 0772380958-0778486168-0774073361 க்கோ அழைத்து உறுதிப்படுத்திக் கொள்வது ஏற்பாட்டாளர்களின் சிரமத்தை தவிர்த்துக் கொள்வதற்கு உதவியாக அமையும்.
-கிராமத்தான் கலீபா-
