சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு வெள்ளைச் சந்தனம் கொண்டு செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான 58 கிலோகிராம் வெள்ளைச் சந்தனம் மீட்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.