Featured Home (TOP)

Recent Comments

Sunday, April 12, 2015

Unknown

அல்-அதாலா பௌண்டேஷன் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு குழாய் நீர் பெறுவதற்கான உதவி



ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி



காத்தான்குடி அல்-அதாலா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை வழங்கும் நிகழ்வு நேற்று (11.04.2015) PMGGயின் மக்கள் அரங்கில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இத்திட்டத்திற்கான நிதியுதவியினை வழங்கிய அல்-கிம்மா நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் HM. ஜாபீர் நளீமி, அல்-கிம்மா நிறுவனத்தைச் சேர்ந்த MU. பசீர்  மௌலவி, NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் நளீமி உட்பட அல்-அதாலா பௌண்டேஷன் நிறுவனத்தின் பிரதிநிதிகளான அஷ்ஷெய்க் ALM.சபீல் நளீமி, வித்யாகீர்த்தி MM.அமீரலி ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதற்கான நிதியுதவியினை ஓட்டமாவடி அல்-கிம்மா நிறுவனம் வழங்கியது.
இதன்போது மேற்படி குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 20 பயனாளிகளுக்கு அதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை எதிர்காலத்தில் அல்-அதாலா பௌண்டேஷன், மேலும் பல பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்வின்போது தெரிவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.








Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :