Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 28, 2015

Unknown

19 ஆவது திருத்தச்சட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. 
இந்த திருத்தச் சட்டமூலம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து விவாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். 
முதல்நாள் விவாதம் இரவு 8.30 மணிவரை நடைபெற்றது. இதன்போது எதிர்த்தரப்பு சார்பில் பல திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. இது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றதோடு, இதன்போது திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக ஆறு பேர் அடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து இன்று முற்பகல் 9 மணிக்கு மீண்டும் அது தொடர்பிலான விவாதம் தொடர்ந்து இடம்பெறுகின்றது.  விவாதம் நிறைவுபெற்றதும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும் குழுநிலை விவாதம் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :