அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட முஹம்மத் நிதார் (சிரேஸ்ட ஆங்கில விரிவுரையாளர்) இன்று காலை வபாத்தானர்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்
BCAS உயர் கல்வி நிறுவனத்தின் கொழும்பு, அம்பாரை, மட்டக்களப்பு ஆகிய வளாகங்களில் ஆங்கில விரிவுரையாளாக கடமையாற்றிய இவர், மாலை தீவிலும் 11 வருடங்கள் ஆங்கில விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக சுகயீனமுற்றிருந்த இவர், இன்று காலை அம்பாரை போதனா வைத்திய சாலையில் வபாத்தானாா்கள்.
ஐனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் இன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் சேர்த்துக் கொள்வானாக.