Featured Home (TOP)

Recent Comments

Tuesday, May 5, 2015

Unknown

உடனடியாக பொதுத் தேர்தல்

நாட்டில் உட­ன­டி­யாக பொதுத்­தேர்தல் நடத்­தப்­படும். தேர்தல் முறைமை மாற்றத்தைக் காரணம் காட்டி பாரா­ளு­மன்றத் தேர்­தலை தள்ளி வைக்­கப்­போ­வ­தில்லை. தேர்தல் முறைமை மாற்றம் தேவை­யென்­பதை நாமும் ஏற்­றுக்­கொள்­கின்றோம். ஆனால், அதனை அவ­சர அவ­ச­ர­மாக ஏற்­ப­டுத்த முடி­யாது என்று ஐ.தே.கட்சி பொதுச்செய­லா­ளரும் அமைச்ச­ரு­மான கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.
20ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டாலும் எதிர்­வரும் பொதுத்­தேர்தல் பழைய முறை­யி­லேயே நடை­பெறும். சிறு­பான்மையினக்­கட்­சிகள் ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் இவ்­வாரம் சந்­தித்து தேர்தல் முறை மாற்றம் தொடர்­பாக பேச்­சுக்­களை நடத்­த­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள ஐ.தே. கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்று திங்கட் கிழமை இடம்­பெற்ற ஊடக­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அமைச்­சரும் ஐ.தே.கட்சி பொதுச் செய­லா­ள­ரு­மான கபீர் ஹாசிம் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;
சிறிய கட்­சிகள் மற்றும் சிறு­பான்மையினக் ­கட்­சிகள் உட்­பட பல்­வேறு சிவில் அமைப்­புக்கள் உட்­பட நிபு­ணர்கள், கல்­வி­மான்கள் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பாக தத்­த­மது யோச­னை­களை முன்­வைத்­துள்­ளனர். அதே­வேளை ஐ.தே.கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் தமது யோச­னை­களை முன்­வைத்­துள்­ளன.
இந்த யோச­னைகள் தொடர்­பாக விரி­வான பேச்­சு­வார்த்­தைகள், விவா­தங்கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. அதுமட்­டு­மன்றி, சிறு­பான்மையினக் கட்­சி ­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் சந்­தித்துப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்த கால அவ­காசம் கோரி­யுள்­ளது.
விரைவில் இப்­பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெறும். எனவே தேர்தல் முறை மாற்­றத்தை உட­ன­டி­யாக அமுல்­ப­டுத்த முடி­யாது. அனை­வ­ரது யோச­னை­களும் ஏற்றுக் கொள்­ளப்­பட்டு அது 20ஆவது திருத்­த­மாக பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­படும். ஆனால் இந்த நட­வ­டிக்­கை­களை அவ­சர அவ­ச­ர­மாக மேற்­கொள்ள முடி­யாது.
அனைத்து தரப்­பி­ன­ரதும் யோச­னைகள் உள்­வாங்­கப்­பட வேண்டும். ஜே.வி.பி. யும் தமது யோச­னை­களை முன் வைத்­துள்­ளது. எனவே நீண்­ட­தொரு நிகழ்ச்சி நிர­லுக்­க­மை­யவே இது தொடர்­பான இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­படும்.
எப்­ப­டி­யா­யினும் எதிர்­வரும் பத்து நாட்­க­ளுக்குள் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பான யோச­னைகள் கிடைத்து விடும் என எதிர்­பார்க்­கின்றோம். உள்­ளூ­ராட்சி சபை­களின் ஆட்­சிக்­கா­லமும் முடி­வ­டைந்து விட்­டது. அதே­வேளை அரசு உறு­தி­ய­ளித்­த­தற்­க­மைய 100 நாட்­க­ளுக்கு பின்னர் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத்­தேர்தல் நடத்­தப்­பட வேண்டும்.
இந்­நி­லை­மையில் பொதுத்­தேர்­தலை நடத்­து­வதே அரசின் முதன்­மை­யான பொறுப்­பாகும். தேர்தல் முறைமை மாற்­றத்தை காரணம் காட்டி பொதுத் தேர்­தலை ஒத்தி வைக்க முடி­யாது.
அதனை உட­ன­டி­யாக நடத்­தி­யாக வேண்டும். மக்­களும் பொதுத் தேர்­த­லையே எதிர்­பார்த்­துள்­ளனர். எனவே தற்­போ­தைய தேர்தல் முறை­மைக்கு அமை­யவே எதிர்­வரும் பொதுத்­தேர்தல் நடத்­தப்­படும். ஏனென்றால் தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்­திற்கு மக்கள் ஆணை இல்லை. இது காலா­வ­தி­யாகி விட்­டது.
எனவே புதி­தாக தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். மக்கள் ஆணையை பெற வேண்டும் என்­பது கட்­டா­ய­மாகும். தேர்தல் முறைமை மாற்றம் தேவை­யென்­பதை நாமும் ஏற்­றுக்­கொள்­கின்றோம். ஆனால் அதனை அவ­சர அவ­ச­ர­மாக ஏற்­ப­டுத்த முடி­யாது. 20ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டாலும் எதிர்­வரும் பொதுத்­தேர்தல் பழைய முறை­யி­லேயே நடை­பெறும்.
எமது அர­சாங்­கத்தை சிறு­பான்மை அரசு என விமர்­சிக்­கின்­றனர். ஆனால் கடந்த மே தினத்தில் எமது ஊர்­வ­லத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்து கொண்டு இந்த அர­சுக்கு மக்­க­ளி­ட­மி­ருந்த ஆத­ரவை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
எனவே பொதுத் தேர்­தலை நடத்தி உண்­மை­யான மக்கள் சக்­கி­யுள்ள அர­சாங்­கத்தை கட்டியெழுப்ப வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து கட்சிகளுடனும் பேசி நிறைவேற்றுச் சபையினது அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டு பொதுத் தேர்தலை விரைவில் நடத்துவோம். பாராளுமன்றம் கலைக்கப்படுமா என்பது தொடர்பாக எனக்கு பதில் வழங்க முடியாது. அதற்கு உரியவர்கள் உள்ளனர் . ஆனால் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்படுவது உறுதியென்றும் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
Source - Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :