(ஏ.எல்.டீன்பைரூஸ்)
காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இன் புதிய தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா (05.06.2015 வெள்ளிக்கிழமை பி.ப.03.30) கல்லூரியின் அதிபர் கெப்டன் யூ.எல்.ஏ.முபாறக் தலைமையில் நடை பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஷ்ணண் கலந்து கொண்டார்.
நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் எம்.ஜ.சேகுஅலி, பிரதி கல்விப்பணிப்பபாளர் எம்.எம்.இஸ்மாலெப்பபை,காத்தான் குடி கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் உட்பட உயர்மட்ட அதிகாரிகள், அதிபர்கள்,ஆசிரியர் கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், பொற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
.
தொழில்நுட்ப ஆய்வு கூடம் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ் இராதாகிருஷ்ணண் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினுல் இயங்கும் பல பிரிவுகள் ஏனைய அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது.