(கவிஞா் – காத்தூரி)
இதயம் கனத்திருக்கிற
மானுட வாழ்வின்
இறுக்கம் தளர்த்த
இறையின் பரிசாய்
வந்து கொண்டிருக்கிறாய்
வாழ்வின் தீயே !
உன் உஸ்னங்களால்
பொசுங்கட்டும் எம்
பாவங்களும்
படடோபங்களும்.
இறுமாப்பின் எச்சங்களைக்கூட
எரித்துவிடு இதயத்தின்
ஓரத்திலிருந்தும்.
ஒவ்வொரு ஆயுளின்
வருடந்தோறும் வந்துபோகிறாய்
கடந்த நோன்புகள்
கனக்கவிருக்கிறது
நாம் கைவிட்ட பாவங்கள்
கணக்கில்வருமா?
நபிவழி தொழுகை
நபிவழி நோன்பு
நபிவழி ஹஜ்ஜு
நமக்கு சொல்ல
நாலுபேருண்டு
நபிவழி நேர்மை
நபிவழி நீதி
நபி வழி சத்தியம் காத்தல்
சொல்லித்தருவாயா?
இறையின் பரிசே !
உண்மையும் ஒழுக்கமும்
சகோதரத்துவமும்
சார்பியம் நீக்கியே
சாட்சியமளித்தலும்
சலனமேயின்றி
சத்தியமுரைத்தலும்
நீதிக்காய் குரலும்
நித்தமும் உரைத்திட
சித்தத்தில் உறுதி
சித்திக்கச் செய்வாயா
மாண்புறு நோன்பே!
எத்தனை நோன்புகள்
நாம் கடந்தாலும்
மாற்றம் வந்தது
ஆயுளில் மட்டும்தான்
சிந்தனைப் போக்கு
மாறாதிருக்க வெறும்
மாதம் கடப்பதில்
மகத்துவம் வருமோ ?
மாறாத மனிதரிடை
மாற்றம் விதைக்க
வருகின்ற நோன்பே
வாழ்வின் எழிலுக்காய்
உன்னை வாழ்த்தி
வரவேற்கிறேன்!
இதயம் கனத்திருக்கிற
மானுட வாழ்வின்
இறுக்கம் தளர்த்த
இறையின் பரிசாய்
வந்து கொண்டிருக்கிறாய்
வாழ்வின் தீயே !
உன் உஸ்னங்களால்
பொசுங்கட்டும் எம்
பாவங்களும்
படடோபங்களும்.
இறுமாப்பின் எச்சங்களைக்கூட
எரித்துவிடு இதயத்தின்
ஓரத்திலிருந்தும்.
ஒவ்வொரு ஆயுளின்
வருடந்தோறும் வந்துபோகிறாய்
கடந்த நோன்புகள்
கனக்கவிருக்கிறது
நாம் கைவிட்ட பாவங்கள்
கணக்கில்வருமா?
நபிவழி தொழுகை
நபிவழி நோன்பு
நபிவழி ஹஜ்ஜு
நமக்கு சொல்ல
நாலுபேருண்டு
நபிவழி நேர்மை
நபிவழி நீதி
நபி வழி சத்தியம் காத்தல்
சொல்லித்தருவாயா?
இறையின் பரிசே !
உண்மையும் ஒழுக்கமும்
சகோதரத்துவமும்
சார்பியம் நீக்கியே
சாட்சியமளித்தலும்
சலனமேயின்றி
சத்தியமுரைத்தலும்
நீதிக்காய் குரலும்
நித்தமும் உரைத்திட
சித்தத்தில் உறுதி
சித்திக்கச் செய்வாயா
மாண்புறு நோன்பே!
எத்தனை நோன்புகள்
நாம் கடந்தாலும்
மாற்றம் வந்தது
ஆயுளில் மட்டும்தான்
சிந்தனைப் போக்கு
மாறாதிருக்க வெறும்
மாதம் கடப்பதில்
மகத்துவம் வருமோ ?
மாறாத மனிதரிடை
மாற்றம் விதைக்க
வருகின்ற நோன்பே
வாழ்வின் எழிலுக்காய்
உன்னை வாழ்த்தி
வரவேற்கிறேன்!
