(ஜுனைட்.எம்.பஹ்த்)
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகம் செறிந்துவாழும் நகரங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரை வீதி (கடலோர வீதி) தற்போது மக்கள் பணயம் செய்ய முடியாத நிலைக்கு மாறிவருவதால் மக்கள் பொிதும் சிரமத்தை எதிா்நோக்குகின்றனா்.
கடந்த அரசாங்கத்தினால் இந்நகரத்தில் பல அபிவிருத்திகள் மேற்கொண்ட போதிலும் மக்களின் பிரதான தேவையாக இருக்கும் இவ்வீதியை அரசாங்கமும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அரச அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்தது காத்தான்குடி மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நகர மக்கள் மீன்பிடி தொழிலுக்கும்,பொழுதுபோக்குக்கு ம் மிகப்பிரதானமாக இக்கடற்கரை கானப்படுவதால் இவ் வீதி மிக முக்கியமானதாக காணப்படுகிறது. இவ் வீதியில் குன்றும், குழிகளும் அதிகமாக காணப்படுவதாலும் வீதியின் சிதைவுகளாலும் இவ் வீதியினால் பயணிப்பது மக்களுக்கு பெரும் சிரமமாக இருப்பதுடன் வீதி விபத்துக்களும் அவ்வப்போது ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது.
இம்மக்களின் பிரதான தேவைகளில் ஒன்றாக இருக்கும் இவ் வீதியினை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வினை பெற்றுத்தருமாறு மாலை
எக்ஸ்பிரஸ் இடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .


