( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர்-12, கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டிலான 'சமூக வேலைத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும், இப்தார் நிகழ்வும்' இன்று மாலை நிந்தவூர்-13ம் பிரிவிலுள்ள மஸ்ஜிதுர் றகுமானியா பள்ளிவாசல் மேல் மாடியில் இடம் பெற்றது.
நிந்தவூர்-12, கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.டபிள்யூ.எம்.ழரீப் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் சங்கைக்குரிய உலமா ஆசீக் அலி மௌலவி, ஓய்வுபெற்ற ஆசிரியர் என்.எம்.எம்.மீராசாஹீப் ஆகியோhர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வுகளில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் பொறியியலாளர் எம்.நஜீப், முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எம்.மன்சூர், இன்று மக்களால் எதிர்பார்க்கப்படும் ஓர் இளம் அரசியல் தலைமுறை சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம் உள்ளிட்ட பிரமுகர்களுடன் உலமாக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிந்தவூரிலுள்ள 25 கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் ஒரு முன்மாதிரியான வேலைத் திட்டத்தை நிந்தவூர்-12 கி.அ.சங்கத்தினர் செய்து, காட்டியுள்ளனர் என்றால் அது மிகையாகாது.