‘போதைக்கு முற்றுப்புள்ளி’ எனும் கருப்பொருளில் புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் ஏற்பாடு செய்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 8.00 மணிக்கு நடை பெற்றது.
காலை 8.00 மணிக்கு பாடசாலையில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான வீதியின் ஊடாகச் சென்று பின்னர் பாடசாலையை வந்தடைந்தது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தின் போது மாணவர்கள் பல்வேறு சுலோகங்களும் ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ttnnews

