ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாக பெயர் மாற்றம் பெற்ற ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சி உறுப்பினர்கள் இணைந்து "நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி" என்ற கட்சியில் யானை சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தீர்மானம் நாளைய தினம் வெளியிடப்படும் என்றும், ஐக்கிய தேசிய கட்சியின் நாளைய கூட்டத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
ராஜித சேனாரத்ன, ஹிருனிக பிரேமசந்திர, அர்ஜுன ரணதுங்க, சுதர்சினி பெர்னாந்துபுள்ளே, ஹேமால் குணசேகர, நியோமல் பெரேரா, எம்.கே.டீ.எஸ். குணவர்தன, விஜய தகநாயக்க, எர்ல் குணசேகர, சரத் அமுணுகம, துமிந்த திஸாநாயக்க போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக வேட்புமனுவில் கைச்சத்திடவில்லை என்று தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவிற்கு வேட்புமனு வழங்க வேண்டும் என்று தெரிவித்து வந்த தரப்பினர் வெற்றி பெற்றிருப்பதாலும், ஊழல்வாதிகள் மோசடிக்காரர்கள் பலருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக வேட்புமனு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருப்பதாலும் அதற்கெதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் மாற்று கட்சியில் போட்டியிடுவது பற்றி கலந்தாலோசித்துள்ளனர்.
ஆகவே அதற்கு மாற்று வழியாக "நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி" எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி இருப்பதாகவும் நளைய தினம் அறிவிக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.
