Featured Home (TOP)

Recent Comments

Tuesday, July 21, 2015

Unknown

“ மஹிந்தவை பிரதமராக்காவிடின் அரசியல் சுனாமி வெடிக்கும் ”

“இலங்கையின் அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவே ஆகும். இதனை மாற்றமுனைந்தால் நாட்டில் அரசியல் சுனாமி வெடிக்கும்” என எச்சரிக்கை விடுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையே பிரதமரைத் தீர்மானிக்கும் சக்தியாகும். இந்த அரசியலமைப்பு ஷரத்து கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மீறப்பட்டதாகவும் அம் முன்னணி தெரிவித்தது.
கொழும்பில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும,
மஹிந்த ராஜபக் ஷ நாட்டின் பிரதமராக மாட்டார் என்றும் ஜனாதிபதி அப்பதவியை வழங்கமாட்டாரென்றும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு எவருக்குக் கிடைக்கின்றதோ அவருக்கே பிரதமர் பதவி வழங்கப்படும். 
இந்த அரசியலமைப்பின் பிரகாரமே நாட்டில் பிரதமர் இதுவரைக் காலமும் நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி அரசியலமைப்பு மீறப்பட்டு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 
100 நாட்கள் ஆட்சிக் காலத்திற்கான வாக்குறுதி வழங்கப்பட்டதால் அன்று பெரும்பான்மையாகவிருந்த நாம் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் 100 நாள் கடத்தும் உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.

எனவே பெரும்பான்மைப் பலமுடைய நாம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தோம். இதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் எமது முன்னணி அமோகமாக வெற்றி பெறும். பிரதமராக மஹிந்த ராஜபக் ஷவை நியமிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
மக்களும் அதனையே விரும்புகின்றனர். இவற்றையெல்லாம் மீறி மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்காமல் தடுத்தால். நாட்டில் அரசியல் சுனாமி வெடிக்கும். அடுத்த பிரதமர் மஹிந்தவே ஆவார். இதில் மாற்றம் இருக்காது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதனை எதிர்க்க மாட்டார். என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

virakesary.lk

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :