எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு எண்கள் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.
நாளை நண்பகலுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பூர்த்தியாகிறது.
எதிர்வரும் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு பற்றிய விபரங்கள் வெளியிடப்பட உள்ளது.
விருப்பு வாக்கு இலக்கங்களை வழங்கும் நடவடிக்கைகளை 15 மற்றும் 16ம் திகதிகளில் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
நேற்றும் இன்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாத காரணத்தினால், நாளை காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் எனவும், சரியான முறையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யுமாறும் பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கோரியுள்ளார்.
