முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இம்முறை பொது தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்ச தேர்தல் ஆணையாளரிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு அவர் அனுமதி வழங்கியுள்ளதாக தேர்தல் செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய இம்முறை தேர்தலுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தபால் மூலம் வாக்களிக்கவுள்ளார்.
குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு பதிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
