தேர்தலின் பின்னர் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் அவர் மூலமாக நாம் முழுமையான அரசியல் தீர்வைப் பெறவேண்டும்.
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் மிக்க கட்சியாக 22 உறுப்பினர்ளைப் பெறவேண்டும். இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
இதுவே தெளிவான இலக்கு. ஒவ்வொரு தமிழ் மகனும் இந்தத் தெளிவைப் பெற வேண்டும். புத்திஜீவிகள் தெளிவுபடுத்தவும் வேண்டும்.
இவ்வாறு மாவடிமுன்மாரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் பா. அரியநேந்திரன் கூறினார்.
