Featured Home (TOP)

Recent Comments

Sunday, August 16, 2015

avathani Media Network

பாராளுமன்றத் தேர்தல் 2015 சில எதிர்வு கூறல்கள் - முஸ்லிம் பிரதி நிதித்துவம் பாரிய அளவு வீழ்ச்­சி­ய­டை­யலாம்:

விகி­தா­சார பிரதி நிதித்­துவ முறையில் நடை பெற்ற பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தல்­களில் சிறு­பா­ன்மை கட்­சிகள் நன்­மை­ய­டைந்­தாலும் இந்த தேர்­தலில் முஸ்லிம் பிரதி நிதித் துவம் பாரிய அளவு வீழ்ச்­சி­ய­டை­யலாம்.
- கடந்­த­கால தேர்தல் பெறு­பே­று­களை அடிப்­ப­டை­யாகக் கொன்டு நோக்கும் போது அனே­க­மாக இந்தத் தேர்தல் முடி­வுகள் 2001 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்ற தேர்தல் முடி­வு­களை ஒத்­த­தாக அமை­யலாம்.
- 2001 ஆம் ஆண்டு தேர்தல் முடி­வு­களின் படி ஐக்­கிய தேசிய கட்சி 109 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 80 ஆச­னங்­க­ளையும்  மக்கள் விடு­தலை முன்­னணி 16 ஆச­னங்­க­ளையும் முஸ்லிம் காங்­கிரஸ் தனி­யாக போட்­டி­யிட்டு 5 ஆச­னங்­க­ளையும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு 16 ஆச­ன­ங்­க­ளையும் பெற்­றனர். அதன்­படி ஐக்­கிய தேசிய கட்­சியும் முஸ்லிம் காங்­கி­ரஸும் இணைந்து 114 ஆசங்­க­ளுடன் ஆட்­சி­ய­மைத்­தது.
2015 ஆம் ஆண்­டுக்­கான பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தலில் பின்­வரும் பண்­பு­களை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.
1. தேர்தல் களம் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு சார்­பாக உள்­ளது.
2. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு பெற்ற 58 இலட்சம் வாக்­கு­களில் மாவட்ட ரீதி­யாக 20 தொடக்கம் 30 வீதம் வீழ்ச்­சி­ய­டை­யலாம்.
3.கடந்த தேர்­தலில் மைத்தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கிடைத்த 62 இலட்சம் வாக்­கு­களில் சுமார் 48 இலட்சம் வாக்­குகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் 7 இலட்­சத்து 60 ஆயிரம் வாக்­குகள் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் 6 இலட்சம் வாக்­குகள் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சிக்கும் எஞ்­சிய வாக்­குகள் ஏனைய சிறு கட்­சி­க­ளுக்கும் கிடைக்கப் பெறும்.
4. தேர்தல் களத்தில் வீழ்ச்சி கண்­டி­ருந்த ஜே.வி.பி.யின் வாக்குப் பலம் அனைத்து மாவட்­டங்­க­ளிலும் அதி­க­ரிக்­கலாம்.
5. முஸ்லிம் கட்­சி­களின் வாக்­குகள் குறை­வ­டைந்து அல்­லது சிதைவ­டைந்து முஸ்லிம் பிரதி நிதித் துவம் குறை­வ­டை­யலாம்.
6. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் 83 வீத­மாக இருந்த வாக்­க­ளிப்பு வீதம் 75 வீதம் குறை­வ­டை­யலாம். வாக்­க­ளிப்­பி­லி­ருந்து தவிர்­த்துக்­கொள்ளும் வாக்­கா­ளர்கள் 95 வீத­மானோர் கடந்த தேர்­தலில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளாவர்
உத்­தேச தேர்தல் முடிவு
 நாடு­பூ­ராக மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் கணிப்­பீடு செய்­யப்­பட்ட தேர்தல்  முடிவு அட்­ட­வ­ணையில் தரப்­பட்­டுள்­ளது.
இதன்­படி ஐக்­கிய தேசிய கட்சி 110 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு 80 ஆச­னங்­க­ளையும் மக்கள் வி­டு­தலை முன்­னணி 16 ஆசங்­க­ளையும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி 16 ஆச­னங்­க­ளையும் முஸ்லிம் காங்­கிரஸ் 1 ஆசனத்தையும் ஈ.பி.டி.பி. ஒரு ஆச­னத்­தையும் ஜன­நா­யக கட்­சிக்கு தேசிய பட்­டி­யலில் ஒரு ஆச­னமும் கிடைக்கப் பெறும்.
இதன்­படி ஐக்­கிய தேசிய கட்­சியை முதன்­மை­யாகக் கொண்ட மக்கள் விடு­தலை முன்­னணி, இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் ஆத­ர­வு­ட­னான பல­மிக்க ஒரு அரசை அமைக்க முடியும். இந்த கூட்ட­ணி­யுடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர அணியில் வெற்­றி­பெற்ற ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­னவின் ஆத­ர­வா­ளர்­களும் சுமார் 20 பேர் அளவில் இணைந்­து­கொள்­ள­வுள்­ளனர். இதன்­படி அடுத்த பாரா­ளு­மன்றம் முக்­கி­ய­மான விட­யங்­களில் 3 இல் 2 பெரும்­பான்மை ஆத­ரவைப் பெறக் கூடிய சக்தி மிக்­க­தாக அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம்
கொழும்பு, களுத்­துறை , கண்டி, வன்னி, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, அம்­பாறை, கேகாலை ஆகிய மாவட்­டங்­களில் சுமார் 10 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அதே நேரம் தொடர்ந்தும் புத்­தளம், குரு­ணாகல் மாவட்ட பிரதி நிதித்­துவம் கேள்விக் குறி­யா­கவே உள்­ளது.
2 இலட்சம் வாக்­கா­ளர்­களைக் கொண்ட அம்­பாறை மாவட்­டத்தில் நிலவும் மும்­முனைப் போட்டி கார­ண­மாக அங்கு இரண்டு முஸ்லிம் பிரதி நிதித்­து­வத்தைப் பெறு­வதும் சந்­தே­க­மாக உள்­ளது. அதா­வது, உத்­தேச தேர்தல் முடி­வு­களின் படி திகா­ம­டுள்ள மாவட்­டத்தில் ஐக்­கிய தேசிய கட்சி 4 ஆச­னங்­க­ளையும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 2 ஆச­ன­ங்­க­ளையும், தமி­ழ­ர­சுக்­கட்சி 1 ஆச­னத்தி­னையும் பெறும் வாய்ப்பு உள்­ளது.
இங்கு தனித்து போட்­டி­யிடும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சுமார் 25 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்­றாலும் மாவட்­டத்தின் கூடிய மீதிக்­கான ஆசனம் சுமார் 55 ஆயிரம் வாக்­கு­களைப் பெறும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சிக்கு கிடைக்கப் பெறு­கின்­ற­மை­யினால் அந்த வாக்­குகள் பய­னற்றுப் போகும்.
அதே போல ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அம்­பாறை பகு­தியில் சுமார் 70 ஆயிரம் சிங்­கள வாக்­கு­களைப் பெறு­கின்ற நிலையில் 25 ஆயிரம் விருப்பு வாக்­கு­களை பெறும் முஸ்லிம் வேட்­பா­ளர்­களால் எதிர்­கொள்ள முடி­யாமல் போகும்.
இந்த நிலையில் மாவட்­டத்தின் பெரும்­பா­ன்­மை­யான முஸ்­லிம்கள் ஒன்­றி­ணைந்து ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கிடைக்கும் நான்கு ஆச­னங்­களில் அதி­கூ­டிய ஆச­னங்­களைப் பெற முயற்­சிக்­கு­மி­டத்து முஸ்லிம் பிரதி நிதித்­து­வத்தை அதி­க­ரிக்க முடியும்.
அடுத்த பிர­தான மாவட்­ட­மான மட்­டக்­க­ளப்­பில்­முஸ்­லிம்கள் 3 பிர­தான கட்­சி­களில் பிரிந்து போட்­டி­யி­டு­கின்ற நிலையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­டணி  மற்றும் முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய இரு கட்­சி­களில் இருந்தும் தலா ஒருவர் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான சூழல் நில­வு­கின்­றது.
வன்­னியைப் பொறுத்­த­வரை இம்­முறை சுமார் 10 ஆயிரம் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிக்கும் தகு­தியைப் பெறாமை கார­ண­மாக அங்கு முஸ்­லிம்­களின் வாக்குப் பலம் குறைந்­துள்­ளது. இந் நிலையில் ஒரு உறுப்­பி­னரே தெரிவு செய்­யப்­ப­டலாம்.
அதே­நேரம் சில முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் ஐ.ம.சு.முன்­ன­ணி­யுடன் இணைந்து போட்டியிடுகின்ற காரணத்தினால் அந்தக் கட்சியில் முதன்மை வகிக்கும் சிங்கள வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளது.
கொழும்பு
கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஐ.தே.கட்சியில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் கட்சிக்குள் நிலவும் போட்டித் தன்மைகள் காரணமாக சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களே தெரிவு செய்யப்படலாம். இந்தப் பின்னணியில் ஒருவர் அல்லது இரு முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவதற்கான சூழ்நிலை காணப்படுகிறது.
-vidivelli.lk

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :