Featured Home (TOP)

Recent Comments

Monday, August 17, 2015

avathani Media Network

24 மணி நேரங்­களில் 5 பேர் கொ­லை

நாட­ளா­விய ரீதியில் நேற்று நண்­பகல் 12.00 மணி­யுடன் நிறை­வ­டைந்த 24 மணி நேரத்­துக்குள் 5 பேர் கொலை செய்யப்பட்டதாக பதிவாகியுள்ளது. இந்த ஐந்து கொலை­களும் தேர்­த­லுடன் தொடர்­பு­பட்­டவை அல்­ல­வெ­னவும் இரு சம்­ப­வங்கள் குறித்து சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
அத்துடன் ஏனைய சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­களைத் தேடிவரு­வ­தா­கவும் அவர் கூறினார்.
நேற்று முன் தினம் சனிக்­கி­ழமை நண்­பகல் வாழைச் சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட எம்.பி.சி.எஸ். பாதையின் ரயில் குறுக்கு வீதிக்கு அருகில் அடை­யாளம் தெரி­யாத துப்­பாக்கி தாரியின் துப்­பாக்கிப் பிர­யோ­கத்­துக்கு உட்­பட்டு 35 வய­து­டைய நபர் ஒருவர் கொல்­லப்­பட்­டுள்ளார்.ஓட்­ட­மா­வடி பிறைந்­து­ரைச்­சேனை பகு­தியைச் சேர்ந்த முகம்மட் அமீன் (35 வயது) என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
இத­னி­டையே அம்­ப­லாந்­தோட்டை பொலிஸ் பிரிவின் ஒலு­வில பிர­தே­சத்தில் மற்­றொரு கொலை சம்­பவம் பதி­வா­கி­யுள்­ளது. நேற்று முன் தினம் இரவு இடம்­பெற்­றுள்ள இந்த சம்­ப­வத்தில் 36 வய­து­டைய அம்­ப­லாந்­தோட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். குறித்த நபரும் மேலும் இரு­வரும் பிர­தே­சத்தின் குளக்­கட்டு ஒன்றின் அருகே மது­பானம் அருந்­திய போது அவர்­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் முற்­றி­ய­தை­ய­டுத்து இந்த கொலை இடம்­பெற்­றுள்­ளமை ஆரம்ப கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது.
இதே­வேளை மிரி­ஹான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மாதி­வல, அம்புல் தெனிய பிர­தே­சத்தில் நபர் ஒருவர் கத்­தியால் குத்தி கொலைச் எய்­யப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் நேற்று முன் தினம் இரவு 8.30 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது. 47 வய­து­டைய நபர் ஒரு­வரே இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டுள்ளார். கொலை­யுண்ட நபரின் மனை­வியின் மூத்த சகோ­தரர் இந்த கொலையை செய்தார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்­பட்­டுள்ளார். குடும்ப தக­ராறு கார­ண­மாக இந்த கொலை இடம்­பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளன.
இது இவ்வாறிருக்க தம்­ப­கல்ல பொலிஸ் பிர­தே­சத்தின் ஹேன­ஹி­டி­யான எனும் இடத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயு­தங்­களால் குத்தி கொலை செய்யப்­பட்­டுள்ளார். இச்­சம்­ப­வமும் நேற்று முன் தினம் மாலை வேளை இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். மாலை 5.30 மணி­ய­ளவில் கத்திக் குத்­துக்கு இலக்­கா­னவர் வைத்­தி­ய­சா­லைக்கு சென்று சிகிச்சைப் பெற்­று­விட்டு மீன்டும் வீடு திரும்­பிய நிலையில் இரவு 11.00 மணி­ய­ளவில் உயி­ரி­ழந்­துள்ளார்.
இதே­வேளை நெலுவ பொலிஸ் பிரிவில் லேல்­வல சந்­தியில் வைத்து வெட்­டுக்­கா­யங்­க­ளுடன் 63 வய­து­டைய நபர் ஒருவர் சட­ல­மாக பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்ளார். நேற்று காலை 7.00 மணிக்கு பொலி­ஸா­ருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் இரவு தனது நண்பன் ஒருவருடைய வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொன்டிருந்த போது இவர் இவ்வாறு கொலைச செய்யப்பட்டிருப்பதாக வும் பொலிஸார் சந்தேக நபர்களை அடையாளம் காணாத நிலையில் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :